Showing posts with label வாழ்த்தரங்கம். Show all posts
Showing posts with label வாழ்த்தரங்கம். Show all posts

Thursday, June 11, 2009

துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம்



துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம்

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்தரங்கம் 11.06.2009 வியாழக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக ஹாபிஸ் ப‌ஷீர் அஹ்ம‌த் இறைவசன்ங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் காக்கா தலைமை தாங்கினார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் அப்துல் ரஹ்மான் அவர்கள் மேற்கொண்ட சேவையினை நினைவு கூர்ந்தார்.

அல்ஹாஜ் சையத் எம். ஸலாஹூத்தீன் அவர்கள் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பு ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து கொள்வதற்காக பி.எஸ்.எம். அப்துல் காதர், முஹம்மது ஜலீல் உள்ளிட்ட பலரால் துவங்கப்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் ஈமான் என்றால் அப்துல் ரஹ்மான் என்று குறிப்பிடும்படியாக தனது சேவையின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர் அப்துல் ரஹ்மான். சகோதர சமுதாய மக்களது தேவையாக இருக்கட்டும், இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து அம்னெஸ்டி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட அப்துல் ரஹ்மான் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பரிணமிப்பார். அவர் தமிழக சமுதாய மக்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ஒரே குடையின் கீழ் பரிணமிக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது ஏற்புரையில் எல்லாப் புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே என்றார். வேலூர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்ட நிலையினை எடுத்துரைத்த அவர் தனது வெற்றிக்காக மனமுருகி பிரார்த்தித்த அத்தனை நல்லுங்களுக்கும் தனது நன்றியினை வெளிப்படுத்தினார். நம்மையெல்லாம் வழிநட்த்திச் செல்லும் அல்ஹாஜ் சலாஹுத்தீன் காக்கா போன்றவர்களது ஒத்துழைப்பு, உற்சாகத்தின் காரணமாக இதுபோன்ற பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தர பிரார்த்திப்போம்.

எம்.பி.யாக இருந்தாலும் எப்போதும் போல் உங்களிட பணிபுரியக்கூடிய அப்துல் ரஹ்மானாகவே இருந்து வருவேன். இப்பதவியின் காரணமாக என்மீதுள்ள பொருப்புகள். சமுதாயம் என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இன்ஷா அல்லாஹ் எனது பணிகள் அமைய துஆச் செய்யுங்கள்.
நான் தவறு செய்தால் என‌து த‌வ‌றை சுட்டிக்காட்டி அத‌னைத் திருத்துங்க‌ள். நன்றாகப் பணி செய்தால் உற்சாகப்படுத்துங்கள். உங்களில் நான் ஒருவன் என்றார்.

லெப்பைக்குடிக்காடு ஜமாஅத் அப்துல்லாஹ் பாஷா, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, அறந்தாங்கி பைசல், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் எஸ். சம்சுதீன், கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் உள்ளிட்டோர் தங்களது ஊர் ஜமாத்துகளின் சார்பிலும், அமீரக காயிதேமில்லத் பேரவை ஹமீதுர் ரஹ்மான், மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி, ஈமான் நிர்வாகிகள் எஸ்.எம். ஃபாரூக், எம். அப்துல் கத்தீம், ஸ்கை சீ பிரைட்டின் செய்யது எம். அப்துல் காதர், ஜமாஅத்துல் உலமா சபையின் தாவூத் அலி மன்பயீ, குவைத் பள்ளி இமாம் மவ்லவி காஜா முஹம்மது ஜமாலி மக்கீ மன்பயீ, எமிரேட்ஸ் இந்தியா பிரெடர்னிடி ஃபாரம் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊர் ஜமாஅத்தினர் சார்பாகவும், ஈமான் அமைப்பின் சார்பிலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கோட்டக்குப்பம் ஜமாஅத் சார்பில் அதன் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இனி வேலூர் எம்.பி. அவர்கள் ‘தாஜுல் மில்லத்’ என்றழைக்கப்படுவார் என்றார்.

ஈமான் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.நிக‌ழ்ச்சியினை ஈமான் விழாக்குழு செய‌லாள‌ர் காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன் தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

வாழ்த்த‌ர‌ங்கிற்கான‌ ஏற்பாடுக‌ள‌ ஈமான் நிர்வாகிக‌ள் முதுவை ஹிதாய‌த், ஹ‌மீது யாசின், ஹ‌மீதுர் ர‌ஹ்மான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர்.


 
 
 
 
Posted by Picasa

Monday, August 11, 2008

துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்

PRAVASI BHARATIYA SAMMAN விருது பெற்ற
ETA ASCON நிர்வாக இயக்குநருக்கு
துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்



துபை ஈமான் அமைப்பு மிகச் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியக்குடிமகனுக்கான PRAVASI BHARATIYA SAMMAN விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற ETA ASCON குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கு வாழ்த்தரங்கை 01.03.2007 வியாழன் மாலை துபை தேரா பகுதியில் அமையப்பெற்ற குவைத் பள்ளியில் ( லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் ) அரங்கேற்றியது.

துவக்கமாக மெளலவி அப்துல் மாலிக் அரூஸி இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் வாழ்த்தரங்கம் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார். மிகச்சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருது பெற்றதும் ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் இவ்விருது தனக்கு மட்டும் கிடைத்த விருதல்ல. தனது நிறுவனத்தில் பணிபுரியும் 45,000 பேர்களுக்கும் கிடைத்த விருது என்று கூறி தனது பெருந்தன்மையுடன் வெளிப்படுத்திய நிகழ்வை நினைவு கூர்ந்தார். அத்தகைய பெருமையுடையவர்க்கு மிகப்பெரிய அரங்கில் விழா நடத்த ஆவல் கொண்டு காக்காவை அணுகிய போது இறைவனின் இல்லமான பள்ளிவாசலிலேயே மிகவும் எளிமையாக நடத்தப்படுவதையே தான் விரும்புவதாகக் கூறியதையடுத்து இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். காக்கா அவர்கள் கல்வி, சமூக, சமுதாயப் பணிகளுக்காக செய்து வரும் உதவிகள் குறித்தும் விவரித்தார்.

ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் பொறியாளர் அல்ஹாஜ் எம் ஜே முஹம்மது இக்பால் தான் ETA நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு வரும்போது காக்கா அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார். மிகவும் எளிமையுடன் காணப்பட்ட காக்கா பற்றி பெருமிதம் கொண்டார்.

அனைத்து ஜமாஅத்கள் சார்பில் உரை நிகழ்த்திய லெப்பைக்குடிக்காடு அன்வர் பாஷா அவர்கள் ( Executive Director, ETA M&E Division, Dubai )
ETA நிறுவனம் துவங்கிய போது பணிக்குத் தெரிவு செய்ய்யப்பட்ட நூறு பேரில் 30 பேர் லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமீரக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி குத்புதீன், அபுதாபி அய்மான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹ¤சைன் சித்திக்கீ, குவைத் பள்ளி இமாம் மெளலவி காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தேசிய விருதாளர் புலவர் முஸ்தபா தனது உரையில் காக்கா அவர்களின் நேரந்தவறாமை குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் அறிவாளர், உழைப்பாளர், பண்பாளர் என்றார். தாய், தந்தையரின் சொற்களுக்கு பெரிதும் மதிப்பு கொடுத்து உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார். பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வந்தாலும் வளைகுடாவைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் தான் தாயகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பல்வேறு ஜமாஅத்தினரும் தங்களது ஊருக்குத் தேவையான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறித்து பெருமகிழ்வு அடைவதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களது பெருமையை உணர்ந்த அரசு அவர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தி அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் தான் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவை இன்னும் சிறப்புற ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தெரிவிக்க கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பு சார்பாகவும், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், காயல்பட்டணம், முதுகுளத்தூர், கோட்டக்குப்பம், வண்ணாங்குண்டு, கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நிறைவுரையாற்றினார். காயல்பட்டணம் மெளலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. தேரிழந்தூர் தாஜுதீனின் வாழ்த்து கீதமும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் ஈமான் சங்க நிர்வாகிகள், ETA ASCON நிறுவன ஊழியர்கள், பல்வேறு ஜமாஅத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.