Sunday, February 15, 2009

கிருஷ்ணகிரியில் பிப். 17-ல் உருது மாநாடு: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் பிப். 17-ல் உருது மாநாடு: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்பு


கிருஷ்ணகிரி, பிப். 14: கிருஷ்ணகிரியில் பிப். 17-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான உருது மாநாட்டில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்கவுள்ளார்.

இதுகுறித்து பஸ்மே அதப் அமைப்பின் தலைவர் முக்தார் பத்ரி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

பஸ்மே அதப் எனும் உருது இலக்கியச் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான உருது மாநாடு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் செவ்வாய்க்கிழமை (பிப். 17-ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தொடங்கி வைத்து 7 உருது நூல்களை வெளியிடுகிறார்.

மாநாட்டில் உருது கவி, கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உருது பள்ளிகளில் 75 வருடங்களைக் கடந்த 40 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக யுனானி மருத்துவத் துறையில் சேவையாற்றி வரும் டாக்டர் சலாவுதீனை கெüரவிக்கப்படுகிறார் என்றார்.

பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை (எ) துரைசாமி, டாக்டர் சலாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, February 12, 2009

An evening with Dr. K.V.S.Habeeb Muhammad

An evening with Dr. K.V.S.Habeeb Muhammad


The event: A splendid tamil language inter-action programme

( Maanuda vasantham) for non-muslim brothers aimed at removing

the misconception about ISLAM and promoting peace and harmony

in the society.


The Venue: Indian Consulate, Dubai


The time: Insha Allah 27th Feb 2009, 6.00 p.m.


A briefing upon the Speaker :


Dr.KVS , a Chennai based scholar/thinker who plays an important

role in the IFT Islamic Colloquium. A soft spoken, well attired, a credible personality whose perspective , brilliant analysis and modern approach have earned him a high reputation even among non-muslim brothers around the globe.

Please do attend this rare, insightful and enlightening discussion.



Organised by: IMAN , Dubai

Monday, February 9, 2009

வெற்றி வேண்டுமா ?

வெற்றி வேண்டுமா ?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!!
ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.
எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.
”என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?” என ஆசையாகக் கேட்டார். “இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை” என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.. சிறிது நேரத்திற்குப் பிறகு, “இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்” என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், “சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?” என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

”மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை” என்றார் முதியவர். மன்னரும் சரி என்று “ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்” என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள்.. ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

“மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை” என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?” என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

“மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்” என்று அந்த முதியவர் கூறினார்.

ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

தொழுகையின் போதும், நாம் ஆண்டவனோடு ஒன்றிப்போக வேண்டும். அப்படிச் செய்தால் நம் துஆ நிறைவேறும். வெறும் முணுமுணுத்தால் போதாது. அதோடு ஒன்றிப் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டு வேலையாக இருந்தாலும், அலுவலக வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

நன்றி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2009

Ramesh Viswanathan
dateMon, Feb 9, 2009 at 4:18 PM
subjectFW: தன்னம்பிக்கை க���்டுரை - வெற்றி வேண்டுமா ?

VERY NICH STORY.

navaneetha krishnan
dateSun, Feb 8, 2009 at 9:41 PM
subjectRe: தன்னம்பிக்கை கட்டுரை - வெற்றி வேண்டுமா ?

வணக்கம்

இந்தக்கட்டுரை வேறெதுவும் பத்திரிகைகளில் வந்ததா? மறுபிரசுமா? புதியதா? புதியதென்றால் கட்டுரையின் ஆசிரியர் யார்? நீங்கள்தானா? என்பதை தெரிவிக்கவும். பிரசுரத்திற்கு ஏதுவாக இருக்கும். நன்றி!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

mohammed abdul
dateMon, Feb 9, 2009 at 5:57 PM
subjectRe: தன்னம்பிக்கை கட்டுரை - வெற்றி வேண்டுமா ?

Assalamu Alaikum

I have received your message,
Very nice and interesting one.
It will useful for all our community people that we have to concentrate on all our performances to succeed in that.

May Allah bless you and your family for the good things.

With Regards,

Mohamed Abdullah A
055-7492567

Sunday, February 8, 2009

துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன் நிர்வாகிக‌ள் தேர்வு

துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன் நிர்வாகிக‌ள் தேர்வு

துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன் நிர்வாகிக‌ள் தேர்வு வெள்ளிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

புதிதாக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ நிர்வாகிக‌ள் விப‌ர‌ம் வ‌ருமாறு : கௌர‌வ‌த் த‌லைவ‌ராக‌ எம். ஜெஹ‌ப‌ர் ஷெக் அலாவுதீன், த‌லைவ‌ராக‌ எம்.ஏ. முஹ‌ம்ம‌து அப்துல் ஃப‌த்தாஹ் ( 050 7499427 ) , துணைத்த‌லைவ‌ராக‌ ஜே. சிராஜுதீன், செய‌லாள‌ராக‌ கே. சுல்தான் அப்துல் காத‌ர் ( 050 5783 703 ) , துணைச்செய‌லாள‌ராக‌ ஆர் .இன்சான் அலி, பொருளாள‌ராக‌ ஏ. ஹுமாயுன் க‌பீர், துணைப் பொருளாள‌ராக‌ ஏ. செய்ய‌து ப‌ஹ்ருதீன், த‌ணிக்கையாள‌ராக‌ ஐ. குத்புதீன், செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ளாக‌ கே. முஹ‌ம்ம‌து ர‌ஸ்வி, எஸ். ப‌ஷீர் அஹ‌ம‌து, ஜி. முஹ‌ம்ம‌து க‌ஸ்ஸாலி உள்ளிட்டோர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப். 7: வேளாண் பல்கலை. தொலைநிலைக் கல்வி மூலமாக வழங்கும் சான்றிதழ் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் பாடங்களை தொலைநிலைக் கல்வியில் வேளாண் பல்கலை. வழங்க உள்ளது.

பயிற்சிக் காலம் 6 மாதங்கள். ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இப் பாடங்களில் சேரலாம்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இயக்குநர், தொலைதூரக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை-641 003 என்ற முகவரியில் பெறலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 0422-6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கான நேரடிச் சேர்க்கை மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது என்றார்.

Monday, February 2, 2009

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2009, 15:15 [IST]
இலவச நியூஸ் லெட்டர் பெற

டெல்லி: மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு சமமாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசாக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், சிபிஎஸ்இ மாணவ, மாணவியருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளன.

உதாரணத்திற்கு மதரசாவில் ஒரு மாணவன் ஐந்தாவது வகுப்பு படிப்பதாக இருந்தால், அதே வயதுடைய சிபிஎஸ்இ மாணவன், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான்.


இதனால் மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மத்திய அரசு கூறப்பட்டு வந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை, சிபிஎஸ்இ சான்றிதழ்களுக்கு நிகராக மதிப்பிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதரசாக்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிகரான அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அகமது சிராஜ் என்ற 13 வயது மாணவன் டெல்லி சாந்தினி சவுக் மதராசாவில் 5ம் வகுப்பு படிக்கிறார். ஆனால் மற்ற பள்ளிகளில் பயிலும் இவன் வயதுடைய மாணவர்கள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிராஜ் இன்னும் மூன்று ஆண்டுகளில் கல்லுரியில் சேர வேண்டும். ஆனால் இவர் இதுவரை மத புத்தகங்களை மட்டுமே படித்துள்ளார். கல்லுரியில் தான் முதன்முறையாக ஆங்கிலம் மற்றும் கணிதத்தை படிக்க இருக்கிறார்.

இவரது சீனியர்கள் பலரும் உருது மற்றும் யுனானி கற்று வருகின்றனர். ஆனால் தான் வித்தியாசமாக சமஸ்கிருதம் படிக்க போவதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரபி மொழியை பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது போல தான் சமஸ்கிருதமும். அடுத்து சமஸ்கிருதம் படிப்பேன். சிபிஎஸ்இயின் அறிவிப்பு எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார் சிராஜ்.

ஜெய்சுமுதீன் என்பவர் கூறுகையில், அரசின் முடிவால் தற்போது எங்களால் டாக்டர் மற்றும் என்ஜீனியர்களாக முடியும். பிபிஓக்களிலும் வேலை பார்க்க முடியும் என்றார்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், தேவைப்பட்டால் மதரசா மாணவர்களுக்கு பாடங்களை அடிப்படையிலிருந்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

Wednesday, January 28, 2009

Islamic sinhala web site

Pls send this web site your group

This web site Sinhala Language Islamic web Site www.yayuthumaga.com