Wednesday, January 20, 2010

நிகர்நிலை பல்கலை............

நிகர்நிலை பல்கலை.....

இந்தியா முழுவதும் உள்ள 126 நிகர்நிலை பல்கல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து
44 பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக
அந்தஸ்தை திரும்பபப் பெற்றுள்ளதாக உச்சநீதி மன்றத்தில் அறிவித்துள்ளது.

அவையாவன:

Christ College, Bangalore

Vignan's Foundation for Science, Technology and Research, Guntur, Andhra Pradesh

Lingaya's University, Faridabad

St Peter's Institute of Higher Education and Research, Chennai

Noorul Islam Centre for Higher Education, Kanyakumari

Jaypee Institute of Information Technology, Noida

Shobhit Institute of Engineering and Technology, Meerut

Sumandeep Vidyapeet, Vadodara, Gujarat

Sri Devraj Urs Academy of Higher Education and Reserch, Kolar, Karnataka

Yenepoya University, Mangalore

BLDE University, Bijapur, Karnataka

Krishna Institute of Medical Sciences, Satara, Maharashtra

D Y Patil Medical College, Kolhapur, Maharashtra

Meenakshi Academy of Higher Education and Research, Chennai

Chettinad Academy of Research and Education, Kanchipuram

HIHT University, Dehradun

Santosh University, Ghaziabad

Maharshi Markandeshwar University, Ambala, Haryana

Manav Rachna International University, Faridabad

Sri Siddhartha Academy of Higher Education, Tumkur, Karnataka

Jain University, Bangalore

Tilak Maharashtra Vidyapeeth, Pune

Siksha "O" Anusandha, Bhubaneswar

Janardan Rai Nagar, Udaipur, Rajasthan

Institute of Advanced Studies in Education of Gandhi Vidya Mandir,
Sardarshahr, Rajasthan

Mody Institute of Technology, Sikar, Rajasthan

Dr MGR Educational and Research Institute, Chennai

Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai

Kalasalingam Academy of Research and Education, Virdhunagar, Tamil Nadu

Periryar Maniammai Institute of Science and Technology, Thanjavur

Academy of Maritime Education and Training, Chennai

Vel's Institute of Science, Technology and Advanced Studies, Chennai

Karpagam Academy of Higher Education, Coimbatore

Vel Tech Rangaraja Dr Sagunthal R&D Institute of Science, Chennai

Gurukul Kangri, Haridwar

Grapich Era University, Dehradun

Nehru Gram Bharati Vishwavidyalaya, Allahabad

Sri Balaji Vidyapeeth, Puducherry

Vinayaka Mission's Research Foundation, Salem, Tamil Nadu

Bharath Institute of Higher Education And Research, Chennai

Ponnaiya Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu

Nava Nalanda Mahavira, Nalanda, Bihar

Rajiv Gandhi National Institute of Youth Development, Sriperumbudur, Tamil Nadu

National Museum, Institute of the History of Art Conservation and
Musicology, Janpath, New Delhi

Thursday, January 14, 2010

சிவில் சர்வீசஸ் தேர்வு 2010

சிவில் சர்வீசஸ் தேர்வு 2010



நாட்டின் மிக உயரிய அரசு நிர்வாகப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு,
முதனிலை (பிரிமிலினரி), முதன்மை (மெயின்) மற்றும் நேர்முகத்தேர்வு (இன்டர்வியூ) என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதனிலைத் தேர்வு மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதனிலைத்தேர்வில் பொது அறிவு, விருப்பப்பாடம் ஆகிய 2 தாள்கள் இடம்பெறும். பொது அறிவுக்கு 150 மதிப்பெண்களும், விருப்பப்பாடத்திற்கு 300 மதிப்பெண்களும் தரப்படுகிறது. கொள்குறி வினா (அப்ஜக்டிவ்)
வடிவில் இத்தேர்வு அமைகிறது.

முதனிலைத்தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப் பெண் உள்ளதை அவசியம் நினைவில் கொள்ளுங்கள். இத்தேர்வில் தகுதி பெற்றால்தான் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய மையங்
களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

பணி இடங்கள்: 965
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2010 அன்று, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.8.1980க்கு முன்போ 1.8.1989 தேதிக்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது.

வயது வரம்பு சலுகை: ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. உடல் ஊனமுற்றோருக்கு10 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத வரம்பு: இத்தேர்வை ஒருவர் அதிகபட்சமாக நான்கு முறை எழுத முடியும். ஓ.பி.சி.,பிரிவினர் 7 முறை எழுதலாம். உடல் ஊனமுற்ற பொதுப்பிரிவினரும் 7 முறை எழுத முடியும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்காக யு.பி.எஸ்.சி., வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவம் தலைமை தபால் அலுவலகங்களில் வினியோகிக்கப்
படுகிறது. விண்ணப்படிவத்தின் கட்டணம் ரூ.20

இதுதவிர, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் ஆக மட்டுமே செலுத்த வேண்டும். தபால் அலுவலகங்களில் இதைப்பெற்று விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும். பின் கேன்சலிங் செய்து அதே தபால் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.பிரிவினர் விண்ணப்பக் கட்டணம்
செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

போஸ்டல் ஆர்டர், டி.டி., மணி ஆர்டர், செக், பணம் ஆகிய முறையில் கட்டணத்தை செலுத்தக் கூடாது.

Thursday, January 7, 2010

நாயகமே! நபி நாயகமே!

நாயகமே! நபி நாயகமே!



நாயகமே – எங்கள்

நபிகள் நாயகமே!

இறைவேதத்தின்

நிறைவாழ்வே!


காருண்யத்தின் முகவரியே!

ஒளிச்சுடர்களையும்

உயிர்ப்பிக்கும் ஒளிப்பொருளே!


வாழ்வையும் -

வாழ்வின்

அனைத்து நிலைகளையும்

உயிர்ப்பித்தவர்கள் நீங்கள்!


நரக நெருப்பின்

விளிம்பிலிருந்தவர்களையும்

சுவனத்தில் கைகொடுத்துத்

தூக்கியவர்கள் நீங்கள்!


எங்கள் ஆதார வித்தே!

ஈருலகுக்கும் உயிரான சொத்தே!


எங்களுக்கு

உங்கள் ஆதாரம் மட்டும்தான்

ஆதாரம்!

இல்லையென்றால்

இருமைகளும் அல்லவா

கருமைகளாகியிருக்கும்!


அந்தக் கருமைகள் சூழாமல்

அவைகளை அருமைகளாய் ஆக்கி

எங்களைக் காப்பவர் நீங்கள்

ஒளிபூக்கும் ஈமான் உள்ளத்தில்

உயர்வாகப் பூப்பவர் நீங்கள்!


எங்கள்

ஈருலகங்களும்

உங்களால் சிறந்தன

ஏனெனில் நாங்கள்

உங்கள் ‘உம்மத்துக்கள்’

இந்த இறைக்கருணை

அரும்பெரும் பாக்கியமல்லவா!


விழிகளையே

திருடிக்கொள்பவர்களுக்கு மத்தியில்

ஒளிவிளக்காயிருப்பவர் நீங்கள் மட்டும்தான்!


இதயங்களையே

தொலைத்தவர்களுக்கு மத்தியில்

உதயங்களைத் தந்தவர்

நீங்கள் மட்டும்தான்!


இரத்தம் உண்ணும்

ஈரக் குலைகளை

சுத்தப் படுத்தியது

உங்கள் மன்னிப்பு எனும்

‘ஜம்ஜம்’ மட்டும்தான்!


அழுக்கடைந்த

‘ஹஜருல் அஸ்வத்’

சுவனக்கல்லும்

மகிமைப்பட்டது

உங்கள் கரங்கள் தொட்டுத்தான்!


மண்ணும் மறுதலிக்கும்

மனித மிருகங்களை

உங்கள் ஏகத்துவம் மட்டும்தானே

ஏற்றுக் கையளித்தது?


பெண்சிசுவை மண்மூடும்

பெருங்கொடுமைகள் எல்லாம்

உங்கள் காலடிகளில்தானே

காணாமல் போனது!


உங்கள்

கண்ணீர்த்துளிகளில் அல்லவா

உங்கள் உம்மத்துக்களாம்

எங்கள் உள்ளக்கறைகள்

கழுவப்பட்டன?


எங்கள்மேல்

அறையப்பட்ட ஆணிகளையெல்லாம்

உங்களின்

விரிந்த கர இறைஞ்சுதல்களல்லவா

பிடுங்கி எறிந்தன?


உங்கள்மீது மொழியும் அழகான

சலவாத்துக்களில்

எங்கள் ஆன்மா

பரிசுத்தப்படுத்தப்படுகிறது!

உங்கள் சுன்னத்துக்களில்

எங்கள் ஜன்னத்துக்கள்

அலங்கரிக்கப்படுகின்றன!


உங்கள்

பாதத் துகள்களின்கீNழு

எங்களுக்குப் பால் நதிகளும்

தேன் நதிகளும் பிறக்கின்றன!


உங்கள் பார்வைகளில்

எங்கள் பாவங்கள் மறைகின்றன!


உங்கள் ஒளிர்மைகள் - எங்கள்

இருட்டுக்களின் அழுக்குகளைக்

களைந்து விடுகின்றன!


உங்கள் கனிவுகள்

எங்கள் கவலைகளைக்

கழற்றி விடுகின்றன!


அகில முழுமைக்குமே

அருட்கொடையாக

அனுப்பப்பட்டவர்களல்லவா நீங்கள்?


மானுடம் முழுமைக்கும்

நீங்கள் மட்டும்தானே

முன்மாதிரியாக முன்மொழியப்பட்டீர்கள்?


உங்கள்

மேனியிலிருந்து வழிந்த

வியர்வை முத்துக்களில்

எங்கள் சுவனக் கூலிகள் அல்லவா

நிச்சயிக்கப்பட்டன?


நீங்கள்

எட்டிநடந்த

ஒவ்வொரு எட்டிலும்

எங்கள் பாதைகள் அல்லவா

செப்பனிடப்பட்டன?


உருக்குலைந்துபோன

படைப்பினங்களை

ஒழுங்குபடுத்த வந்தவர்களில்

உங்களைப்போல்

முழுமையானவர் யாருமே இல்லை!


இந்த

அத்தாட்சிப் பத்திரங்களை

அன்று இறைவன் சொன்னான்

இன்று

உலகம் சொல்கிறது!

இனிவரும்

நாளும் சொல்லும்

உங்கள் வழியேதான்

அனைத்து உலகமும் செல்லும்!


ப.அத்தாவுல்லா



அருஞ்சொற்பொருள்:

உம்மத்துக்கள்-சமுதாயம், சுன்னத்துக்கள்-வழிமுறைகள், ஜன்னத்துக்கள்-சுவர்க்கம், ஸலவாத்து-நபிவாழ்த்து, ஜம்ஜம்-வற்றாத புனித நீரூற்று(மக்காவிலுள்ளது), ஹஜருல் அஸ்வத்-கஅபாவில் உள்ள சுவனக்கல், இருமை-இம்மை-மறுமை

Wednesday, January 6, 2010

துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன்

துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன்

துபாய் : துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌னின் 15 ம் ஆண்டு வ‌ருடாந்திர‌ பொதுக்கூட்ட‌ம் ஜ‌ன‌வ‌ரி 8 வெள்ளிக்கிழ‌மை ( ஹிஜ்ரி 1431 முஹ‌ர்ர‌ம் 22 ) ஜும் ஆ தொழுகைக்குப் பின்ன‌ர் அல் மம்சார் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

கூட்ட‌த்திற்க்கு த‌லைவ‌ர் எம்.ஏ. முஹ‌ம்ம‌து அப்துல் ப‌த்தாஹ் த‌லைமையேற்க‌வும், துணைத்த‌லைவ‌ர் ஈ.கே.எம்.ஜே. சிராஜுதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்த‌வும், செய‌லாள‌ர் கே.சுல்தான் அப்துல் காத‌ர் ஆண்ட‌றிக்கை வாசிக்க‌வும், பொருளாள‌ர் ஏ. ஹுமாயுன் க‌பீர் நிதிநிலை அறிக்கை வாசிக்க‌வும், த‌ணிக்கையாள‌ர் அறிக்கையினை இ. குத்புதீனும் வ‌ழ‌ங்க‌ உள்ள‌ன‌ர்.

ச‌ங்க செயலாக்க‌ம் செய‌ல்ப‌டுத்த‌ல் திட்ட‌ம் மற்றும் க‌ருத்துப் ப‌ரிமாற்றமும் நடைபெற‌ உள்ள‌து. துணை செய‌லாள‌ர் ஆர். இன்சான் அலி ந‌ன்றியுரை நிக‌ழ்த்துவார்.

அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இருந்தும் வாக‌ன‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 7499 427 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இந்நிக‌ழ்வில் கொடிக்கால்பாளைய‌ம் ந‌க‌ரைச் சேர்ந்த‌ அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


தகவல் : MUSLIM NEWS AGENCY ( M.N.A. )

Thursday, December 31, 2009

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) சார்பில் 17.12.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை ந‌ட‌த்திய‌து.

துவ‌க்கமாக‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம் த‌லைமை தாங்கினார். பொதுச்செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

தாய‌க‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்த‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌ க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லா முஹ‌ர்ர‌ம் மாதம் குறித்த‌ வ‌ர‌லாற்று நிக‌ழ்வுக‌ளை ப‌கிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஊரிலும் பைத்துல்மால் அமைக்க‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்தினார். மேலும் ஜ‌க்காத் ஒவ்வொரு ஊரிலும் முறைப்ப‌டி வாங்கி அத‌னை விநியோகிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து குறித்தும் விவ‌ரித்தார். மேலும் ர‌ம‌லான் மாதத்தில் அமைப்புக‌ள் என்ற‌ பெய‌ரில் ஜ‌க்காத் ம‌ற்றும் பித்ராக்க‌ளை வ‌சூல் செய்ப‌வ‌ர்க‌ளிட‌ம் கொடுக்காம‌ல் அந்த‌ந்த‌ ஊரிலேயே இவை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட வேண்டும் என்றார்.

குவைத் ப‌ள்ளி இமாம் ம‌வ்ல‌வி எம். ஏ. காஜா முஹ‌ம்ம‌து ஜ‌மாலி ம‌க்கீ ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ள் முஹ‌ர்ர‌ம் மாத‌ சிந்த‌னைக‌ளை நினைவு கூர்ந்தார். ஹிஜ்ர‌த்தின் ப‌டிப்பினைக‌ளை உண‌ர்ந்து அத‌ன்ப‌டி செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து பேசினார்.

ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார். துஆவுட‌ நிக‌ழ்ச்சி நிறைவுற்ற‌து.

Sunday, December 20, 2009

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி



இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி
வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெறுபவர் இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும். ஆட்டோ
வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரின் குடும்ப
ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு
மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ரூ800 தொகையை பங்கு முலதனமாக
ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும். 2 ஆட்டோ ஒட்டுநரின்
பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ
வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி அளிக்கின்றது.

நமது இஸ்லாமிய இளைஞர்கள் இக்கடனை பெற பின்வரும் அரசு அலுவலகங்களை தொடர்பு
கொள்ளலாம்.

மேலான்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக்
கழகம்.
807 அண்ணா சாலை
5வது தளம், சென்னை-2
தொலைபேசி:
28514846
நிகரி: 28515450

அனைத்து மாவட்ட பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்
மேலாளர், தமிழ்நாடு கூட்டறவு வங்கி
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்

Tuesday, November 17, 2009

www.teacharabic.com

Assalamu Alaikum wa Rahmathullah wa Barakatuh

Hope you are fine. Alhamdu Lillah.

I had gone through your article on Arabic language and its importance
as the Language of the Holy Qur'an. It's fine and is deeply rooted.
Jazakallah.

I would like to intorduce myself to you before i could discuss
anything with you;

I am Sr. Syed Karamathullah Bahmani, Professor of Arabic (retired
redently). I have heen teaching thelanguage of the Qru'an Arabic at
many centres attached to our Academy of Arabic Studies in Chennai.

I have published books from Arabic alphabet to the highest level of
Comprehensive Arabic grammar and other books based on my experience
and vision and all my books are used in schools, colleges and
universities.All these books are in english as well as Tamil.

I hope you would have seen my book 'ARABI MOZHI ILAKKANAM' in 600
pages, the FIRST BOOK IN TAMIL ON ARABIC GRAMMAR. I have also
published Arabic readers in 5 parts both in Tamil and English version
and these books are used in many Matriculation schools in Tamilnaduand
elsewhere.

I am in touch with many people on the MASS LITERACY PROGRAMME for the
propagation of Arabic language from the Maktab level (Anaivarukkum
Arabi Mozhi).

Undre this programme, Arabic language can be taught to the Children at
the Maktab level, the the children studying in English and Tamil
medium schools, for the Adults and also for the Ladies at the village
level.

you may kindly visit our website:www.teacharabic.com and revert back
to me, Insha Allah we can discuss on the subject and meet sometime
somewhere, Insha Allah.

Wassalam






--
Dr.S.K.BAHMANI

skbahmani@gmail.com