Thursday, April 1, 2010

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.

சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

மேலும் விபரங்களுக்கு :

தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677

மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com
Burmacentre.dubai@gmail.com

ஹஜ் புனித பயண விண்ணப்பம் : நாளை முதல் வினியோகம்

ஹஜ் புனித பயண விண்ணப்பம் : நாளை முதல் வினியோகம்
ஏப்ரல் 01,2010,00:00 IST

சென்னை : ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், நாளை முதல் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயணத்திற்கான தற்காலிக பதிவு விண்ணப்பங்களை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக ஹஜ் குழு நிர்வாக அலுவலரிடம் சென்று, ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.hajcommittee.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனை கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு நடப்பு கணக்கில்(எண்:30683623887) செலுத்தி, அதற்கான வங்கி ரசீது நகலுடன் தமிழக ஹஜ் குழுவிடம், ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச பாஸ்போர்ட் இருப்பின், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்திருந்தால், இருப்பிட முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும். பரிசீலனை கட்டணமாக அளிக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.