Saturday, February 28, 2009

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி
வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 27, 2009, 16:41 [IST]

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0227-iman-conducts-speech-contest-on-march.html


துபாய்: துபாய் ஈமான் அமைப்பு மார்ச் 6ம் தேதி வெள்ளிக்கிழமை, துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் மீலாத் பேச்சுப் போட்டியை நடத்துகிறது.

அன்று மாலை 4.30 மணிக்கு இப்பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒரு துணைத் தலைப்பில் உரை நிகழ்த்தலாம்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு துபாய் - சென்னை - துபாய் செல்ல எமிரேட்ஸ் விமான பயணச்சீட்டும், லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கும் எட்டு கிராம் தங்க நாணயமும், அல் மஷ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரங்கள் மூன்று நபருக்கும், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் வழங்கும் திர்ஹம் ஆயிரம் பரிசுக் கூப்பனும், இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 க்கான பரிசுக் கூப்பனும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் திர்ஹம் 200 க்கான பரிசுக் கூப்பன் பத்து பேருக்கும் வழங்கப்படும்.

போட்டியாளர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம்.

போட்டியாளர் அரங்கினுள் 15 நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 28 பிப்ரவரி 2009

மேலதிக விபரங்களுக்கு : 050 51 96 433 / 050 467 4399 / 050 58 53 888 / 050 2533 712 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது,

www.imandubai.org

http://www.muduvaivision.com/others/Maanuda_vasandham.pdf


என்ற இணையதளத்தையோ தொடர்பு கொண்டு அறியலாம்.

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.























துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

http://www.imandubai.org/photogallery.html

துபாய் ஈமான் அமைப்பு மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்தியது.

மானுடவசந்தம் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார்.
ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் த‌மிழ‌ன் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பாகிவ‌ரும் மானுட‌ வச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி துபாயிலும் ஈமான் அமைப்பின் சார்பில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் இஸ்லாம் குறித்த‌ த‌ங்க‌ள‌து ஐய‌ப்பாடுக‌ளுக்கு உரிய‌ விள‌க்க‌த்தை டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் மூல‌ம் பெற‌ வேண்டும் என‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. நாம் ப‌ல்வேறு ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும் ம‌ன‌ங்க‌ளால் ஒத்த‌வ‌ர்க‌ள். ம‌னித‌நேய‌த்தை வ‌லியுறுத்தாத‌ ச‌முதாய‌ம் இல்லை. இத‌னைப் புரிந்து கொண்டு நாம் அனைவ‌ரும் ஒரு குடும்ப‌மாக‌ இணைந்து செய‌ல்ப‌ட‌ இந்நிக‌ழ்ச்சி பெரிதும் உத‌வும் என்ற‌ ந‌ன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட‌ வ‌சந்த‌ம் நிக‌ழ்ச்சியினை த‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்குகிற‌து.

ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லாஹ், இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக வெங்கடாச்சலம் ராமசாமி குருக்களும், கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பாக அருட்தந்தை பால் ரிச்சர்ட் ஜோசப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் அவ‌ர்க‌ள் த‌ன‌து வாழ்த்துரையில் டாக்ட‌ர் கே.வி.எஸ். அவ‌ர்க‌ளை தொலைக்காட்சி மூல‌ம் பார்த்து வ‌ந்த‌ நான் இன்று நேரில் பார்க்கும் வாய்ப்பை ஈமான் அமைப்பு ஏற்ப‌டுத்திக் கொடுத்துள்ள‌து. இன்றைக்கு திரும‌ண‌த்தின் போது வ‌ர‌த‌ட்ச‌ணை ஒரு முக்கிய‌ப் பிர‌ச்ச‌னையாக‌ இருந்து வ‌ருகிறது. தான் துபாய் ஈடிஏ அஸ்கான் ஜாய்ண்ட் மேனேஷிங் டைர‌க்ட‌ராக‌ இருந்து வ‌ருகிறேன். இதில் சுமார் 85,000 பேர் ப‌ணிபுரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். ஒரு முஸ்லிம் நிறுவ‌ன‌மாக‌ இருந்தாலும் இங்கு அதிக‌மாக‌ ச‌கோத‌ர‌ ச‌முதாய‌த்த‌வ‌ரே அதிக‌ம் ப‌ணிபுரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். ந‌ம்மிடையே உள்ள‌ ந‌ல்லிண‌க்க‌ம் க‌ல‌வ‌ர‌ம் ம‌ற்றும் வெறி மாறுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌ என்ப‌த‌னை டாக்ட‌ர் அவ‌ர்க‌ள் த‌ன‌து கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சியில் தெளிவு ப‌டுத்த‌ வேண்டும் என‌க் கேட்டுக் கொள்வ‌தாக‌க் குறிப்பிட்டார்.

இந்து ச‌முதாய‌ப் பிர‌திநிதியாக‌ப் ப‌ங்கேற்ற‌ பால‌க்காடு வெங்க‌டாச்சல‌ம் ராம‌சாமி குருக்க‌ள் அவ‌ர்க‌ள் த‌ன‌து உரையில் மானிட‌ப்பிற‌வியான‌து ஆண், பெண் என‌ இரு சாதிக‌ளைக் கொண்ட‌து. மானிட‌ வ‌ர்க்க‌ உய‌ர்வுக்கு இய‌ற்கையின் மீது பிரிய‌ம் கொள்ள‌ வேண்டும். ம‌னித‌னால் க‌ண்ட‌றிய‌முடியாத‌ ஒரு சூப்ப‌ர் ப‌வ‌ர் ச‌க்தி அதுவே க‌ட‌வுள். மார்க்க‌ங்க‌ள் ப‌லவாக‌ இருந்தாலும் நொக்க‌ம் யாவும் ஒன்றே. இன்றைக்கு ஏற்ப‌ட்டுள்ள‌ பொருளாதார‌ ம‌ந்த‌நிலை குறித்து க‌வ‌லை கொள்ளாது உறுதியான‌ ந‌ம்பிக்கையுட‌ன் இறைவ‌னைப் பிரார்த்தித்து க‌டின‌மாக‌ உழைத்தால் ந‌ல்ல மாற்ற‌ங்க‌ள் ஏற்ப‌டும். உங்க‌ள் வாழ்வில் வ‌ச‌ந்த‌ம் ஏற்ப‌ட‌ இந்ந‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நம‌க்கு உத‌வும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை என்றார்.

கிறிஸ்த‌வ‌ ச‌முதாய‌ப் பிர‌திநிதியாக‌ ப‌ங்கேற்ற‌ பால் ரிச்ச‌ர்ட் ஜோச‌ப் ம‌னித‌நேய‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ழ‌ங்கி வ‌ரும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளுக்கும், இத்த‌கைய‌ நிக‌ழ்வுக்கு ஏற்பாடு செய்த‌ ஈமான் ச‌ங்க‌த்தின‌ருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளுக்கு பி.எஸ்.எம்.ஹ‌பிபுல்லாஹ், எம். அப்துல் க‌த்தீம், ஏ. அஹம‌து முஹைதீன், ஈடிஏ அஸ்கான் ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம்.அக்ப‌ர் கான், ச‌ம்சுதீன் காக்கா உள்ளிட்டோர் நினைவுப் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கின‌ர்.
ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன் அவ‌ர்க‌ள் ஈமான் அமைப்பின் சார்பில் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளுக்கு நினைவுப் ப‌ரிசை வ‌ழ‌ங்கி கௌர‌வித்தார். த‌ன‌து வாழ்த்துரையில் இறைவ‌ன‌ ம‌னித‌னுக்கு ப‌ண‌த்தை வ‌ழ‌ங்கிய‌தும் அவ‌னைப் புக‌ழ்கிறான். ஆனால் வ‌ச‌திக்குறைவாக‌ப் ப‌டைத்த‌தும் அவ‌னை இக‌ழ்கிறான். என‌வே ப‌ண‌ம் இறைவ‌னிட‌ம் வ‌ந்த‌ ஒரு சோத‌னைப் பொருள் என‌ப‌த‌னை உண‌ர‌ந்து வாழ‌வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை ர‌த்தின‌ச் சுருக்க‌மாக‌ எடுத்துரைத்தார்.

மானுட வசந்தம் நிகழ்ச்சியின் நெறியாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள் மானுட வசந்தம் நிகழ்ச்சி குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் விவரித்தார். ஈமான் என்றால் ந‌ம்பிக்கை, இறைந‌ம்பிக்கை என‌ப் பொருள்ப‌டும். அத்த‌கைய‌ பெருமைக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ளாகிய‌ துபாய் ஈமான் அமைப்பின‌ர் இந்திய‌ ச‌முதாய‌த்தினர்க்காக‌ ப‌ல்வேறு க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ளை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து த‌ன்ன‌மில்லாத‌ ப‌ணியினைப் பாராட்டி வாழ்த்துவ‌தோடு பிரார்த்திக்கிறேன்.

பிர‌வாசி என்றால் வெளிநாடு வாழ் இந்திய‌ர். வெளிநாடு வாழ் இந்திய‌ர்க‌ள‌து முத‌லீட்டைக் க‌வ‌ர‌ மாநாடு ந‌ட‌த்துகிறார்க‌ள் எனில் அங்கு ஜ‌னாதிப‌தியும் இருப்பார். பிர‌த‌ம‌ரும் இருப்பார். இதிலிருந்து வெளிநாடு வாழ் இந்திய‌ர‌து முக்கிய‌த்துவ‌த்தை உண‌ர‌லாம். பிற‌ந்த‌ நாட்டுக்காக‌வும், புகுந்த‌ நாட்டுக்காக‌வும் த‌ங்க‌ள‌து உன்ன‌த‌மான‌ உழைப்பினை அளித்து வ‌ரும் உங்க‌ளைப் பாராட்டுகிறேன்.

இந்திய‌ வ‌ள‌ர்ச்சிக்கு நீங்க‌ள் காட்டி வ‌ரும் அக்க‌றை தொட‌ர வாழ்த்துகிறேன்.

குருக்க‌ள் அவ‌ர்க‌ள் த‌னது பாலக்காட்டுத் த‌மிழிலே பொருளாதார‌ப் பின்ன‌டைவு குறித்து குறிப்பிட்டார்க‌ள். பொருளாதார‌ நிபுண‌ர்க‌ள் இதுகுறித்து ஆய்வு செய்து இந்நிலைக்கு கார‌ண‌ம் என்ன‌ என்ப‌த‌னைக் கூற‌வேண்டிய‌து அவ‌ர்க‌ள‌து க‌ட‌மையாகும்.
மோத‌ல்க‌ள் ஏன் ஏற்ப‌டுகிற‌து. ந‌மக்குள் பேசிக்கொள்ளாத‌த‌ன் கார‌ண‌மாக‌வே ஏற்ப‌டுகிற‌து. க‌ண‌வ‌ன் ம‌னைவியுட‌னும், த‌க‌ப்ப‌ன் பிள்ளையுட‌னும், இரண்டு ச‌முதாய‌த்தின‌ர் ஒருவ‌ருக்கொருவ‌ரும் பேசிக்கொண்டால் பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும்.
க‌ண‌வ‌ன்,ம‌னைவி எப்பொழுது பேசுகின்ற‌ன‌ர் என்றால் தொலைக்காட்சித் தொட‌ரின் போது க‌ம‌ர்ஷிய‌ல் பிரேக் விடும் போது தான் பேசுகின்ற‌ன‌ர். க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் சில‌ இல்ல‌ங்க‌ளில் ப‌ணிக்குச் செல்கின்ற‌ன‌ர். இத‌னால் பிள்ளைக‌ளுட‌ன் பேசுவ‌த‌ற்கான‌ நேர‌ம் கிடைப்ப‌தில்லை.

மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சியின் நோக்க‌மே ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்துவ‌து தான். என‌வே ஈகோவைக் க‌ளைந்து விட்டு ஒருவ‌ருக்கொருவ‌ர் ம‌ன‌ம்விட்டுப் பேச‌ வேண்டும்.
இங்கே என்ன‌ நிக‌ழ்கிற‌தென்றால் க‌ல‌வ‌ர‌த்திற்குப் பின்ன‌ர் தான் இரு ச‌முதாய‌த்த‌வ‌ர் பேசுகின்ற‌ன‌ர். அத‌ற்கு முன்ன‌ரே இவ‌ர்க‌ள் பேசியிருந்தால் இதுபோன்ற‌ நிக‌ழ்வுக‌ள் த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

ம‌னித‌னுக்குத் தேவை வாழ்வாதார‌மும், வ‌ழிகாட்டு நெறியும். எந்த‌ ம‌னித‌னும் கோட்பாடு இல்லாம‌ல் வாழ‌முடியாது. ம‌னித‌னைப் ப‌டைத்த‌ இறைவ‌ன் அவ‌ன் நிம்ம‌தியாக‌ வாழவேண்டும் அத‌ன் மூல‌ம் ம‌னித‌ ச‌முதாய‌ம் நேர்வ‌ழி பெற‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தின் அடிப்ப‌டையில் முத‌ல் ம‌னித‌ராகிய‌ ஆத‌த்தையே முத‌ல் தூத‌ராக‌ ஆக்கிய‌ருளினான்.

இஸ்லாம் என்றால் அமைதி இத‌னைப் பின்ப‌ற்றினால் நேர்வ‌ழி கிடைக்கும். ஒரு ம‌னித‌னுக்கு அமைதி கிடைத்தால் உல‌கில் அவ‌னுக்கு இத‌னைவிட‌ மிகப்பெரிய‌ சொத்து எதுவும் இருக்க‌ முடியாது.

த‌ன‌வ‌ந்த‌வ‌ர்க‌ளை விட‌ அன்றாட‌ங்காச்சியாக‌ இருக்க‌க்கூடிய‌வ‌ன் ப‌டித்த‌வுன் நிம்ம‌தியாக‌ உற‌ங்கிவிடுகிறான். இஸ்லாத்தை பின்ப‌ற்றினால் ம‌னித‌னுக்கு அமைதி கிடைக்கும் என‌ இறைவ‌ன் வாக்க‌ளிக்கிறான். சில‌ கோட்பாடுக‌ளில் த‌னி ம‌னித‌ அமைதி குறித்தும், சில‌வ‌ற்றில் ச‌முதாய‌ அமைதி குறித்தும் கூறுவார்க‌ள். ஆனால் இஸ்லாம் இவ்விர‌ண்டையும் போதிக்கிற‌து.
நெஞ்சுக்கு நீதி செலுத்த‌ வேண்டும். ஆன்மாவுக்கு தீங்கிழைத்த‌ல் கூடாது. ச‌முதாய‌ உண‌ர்வுக‌ளை, உரிமைக‌ளை காய‌ப்ப‌டுத்த‌க்கூடாது. அநீதிக‌ள் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ ஒன்ப‌து ஆண்டுக‌ளாக‌ தொலைக்காட்சியின் வாயிலாக‌ த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌கிற்கு ம‌னித‌நேய‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. அமைதி பெறுக‌ ! அமைதி த‌ருக‌ ! என‌க்கூறி மானுட‌ வ‌சந்த‌ம் நேய‌ர்க‌ல் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு விரிவான‌, விள‌க்க‌மான‌ ப‌திலை வ‌ழ‌ங்கினார் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து.

ஈமான் அமைப்பின் ஊட‌க‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார். விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர். இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்க‌த்தில் 500க்கும் மேற்ப‌ட்டோர் குழுமியிருந்த‌ன‌ர். பெண்க‌ளும் அதிக‌ அள‌வில் ஆர்வ‌முட‌ன் வ‌ந்திருந்த‌ன‌ர். ப‌ல‌ர் இட‌ம் கிடைக்காம‌ல் திரும்பிச்சென்ற‌ன‌ர்.
ச‌‌‌க்தி எஃப்.எம், வானொலி, ஆசியாநெட் வானொலி, த‌ட்ஸ்த‌மிழ்.காம், தினம‌ல‌ர் வெளிநாட்டு வாழ் இந்திய‌ர் செய்திக‌ள், அதிகாலை.காம், ஈமான்டைம்ஸ் கூகுள் குரூப், முதுவைவிஷ‌ன்.காம்,காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்.காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.இன், த‌னிந‌பர் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் உள்ளிட்ட‌வ‌ற்றின் மூல‌ம் ம‌க்க‌ளுக்கு செய்திக‌ள் அதிக‌ அள‌வில் சென்ற‌டைந்த‌தும் இத‌ற்குக் கார‌ண‌ம்.

செய்தித் தொகுப்பு : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Thursday, February 26, 2009

மீலாதுந் நபி

மீலாதுந் நபி

( ஆலிம் செல்வன் )

அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது
அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீளாது
அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !

இறையவன் அருளினால்
இகந்தனில் உதித்திட்ட
மறையவன் படைப்பினில்

மறுவிலா தொளிர்ந்திட்ட
புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !


ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான்
அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான்
ஆதத்தை அவனே இறக்கி வைத்தான்
அவர் பெயரால் பாவங்கள் மன்னித்தான்

எங்கும் எதுவும் இயங்குவதில்லை அவனது கட்டளையின்றி
என்றும் அவனது கட்டளையில்லை அவரது பொருட்டாலன்றி !
அவன் பேரருளே
அவர் காரணமே !



புண்ணிய நபியின் பிறந்த நாள் இன்று மீலாது
புவியினில் அவரின்றி உயிரினம் எதுவும் வாழாது
மறுமையின் நிழலும் சுகமும் எவர்க்கும் மீளாது !

இகமது வாழ்ந்திட
ஏற்றங்கள் தந்திட்ட
நிறைமதி தோற்றிடும்
எழில்மிகு முஹம்மதர்
புனித நல் மணியின் பிறந்த நாள் இன்று மீலாது !



அகிலத்தில் நபியாய்ப் பிறந்தவரில்
அதிமுதலாய் அவரைப் படைத்திட்டான்
புகழ் கொண்ட நான்கு ரசூல்மாரில்
புனிதத்தின் கருவாய் அமைத்திட்டான்
அகமகிழ்ந்தவனே பெருமிதம் கொண்ட ஐம்பெரும் தூதரில்
அறந்தனில் சிறப்பினில் பெருமையில் நிறைந்த அன்பினைப் பெற்றவர் அவனே !
அவன் ஓதும் புகழ்
அவர் மீதிறங்கும்



கண்ணிய நபியின் பிறந்த நாள் இன்று மீலாது
காலங்கள் தோறும் அவரின்றி உண்மை வாழாது
கறைகளை விரட்டும் அறிவொளி நின்றே ஆளாது !
புவியினில் ஒழுக்கமும்
பொறுமையும் நிலைத்திட்ட
உவகையும் நிலைத்திட்ட
உவகையும் ஒற்றுமையும்
அன்போடு உயர்த்திட்ட
காசிமெந் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது !



மறைகளின் சிகரம் நல்குர் ஆனை
மனிதகுலம் திருந்திட அளித்திட்டான்
திருவாய் மனிதனை உருவாக்கும்
தெளிவான மார்க்கம் காண்பித்தான்
மறுவிலா துயந்ந்து நிறைவினைப் பெற்றிவ் வுலகம் புரந்திட
குறையற வாழும் குணத்தின் குன்றாய் இணையற அவரைப் படைத்தான்
அவர் பேர் சொல்லியே
அகிலம் நின்று வெல்லுமே !


( ஈமான் அமைப்பின் முப்பதாம் ஆண்டு மலர் 2006 லிருந்து )

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் கல்வி சேவை

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் கல்வி சேவை

கல்வி உலக சமுதாய அறிவுக் கண்களை திறக்கச் செய்யும் திறவுகோல். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அல் குர் ஆன் 16.43 )

கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள். ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் கல்வி கற்பது கட்டாயக் கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது இஸ்லாம் கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது கல்வியறிவு இல்லாத எந்த சமுதாயமும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்ந்து சிறக்க முடியாது என்பதை அனுபவ பூர்வமாக கண்டு வருகிறோம்.

இஸ்லாம் கல்விக்கு கண் தந்த அரிய பொற்காலம் வெறும் நினைவு தூண்களாக காட்சி அளிக்கின்றன நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயங்களைவிட 200 வருடங்கள் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம் இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும் போது அதிகளவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் இடைக்காலத்தில் கல்வியைப் பற்றிய எந்தவித சிந்தனையும் கவலையும் இன்றியும் அது ஒரு அழியாச் செல்வம் என்பதை மறந்த நம்மில் பலர் சொத்து சேர்ப்பதிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

சீன தேசம் சென்றாகிலும் சீர்கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என உலக மனித குலத்தின் வாழ்வியல் ஆசானாகப் பிறந்த அண்ணல் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் இப்படி கல்விக்கு கண் தந்த இஸ்லாமிய வரலாற்றை ஒட்டியே தொடங்கப்பட்ட ஈமானின் கல்வித் திட்டம் முதல் ஆக்கமும் ஊக்கமளிக்கும் எந்த ஓர் திட்டங்களும் இறைத்தூதர்களின் வழியாகவும் தொடர்ந்து வருபவை என்கின்ற உண்மையை நாம் முதலில் தெளிவாக உணர வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழகம் வாழ்முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் மிகவும் பின் தங்கிய நிலைக்கு காரணம் கல்வியின்மை தான் என்ற உண்மையை உண்ர்ந்த வளைகுடா வாழ்க்கையின் அனுபவமும் தொலைநோக்கு சிந்தனையும் சமுதாய பற்றும் உள்ள எங்களது தனி மரியாதைக்குரிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் (MANAGING DIRECTOR E.T.A. ASCON GROUP OF COMPANIES) வளைகுடா நாடுகளில் வியர்வை சிந்த உழைக்கும் நம் சகோதரர்கள் ஆடம்பர வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் தன் பிள்ளைகள் தன் சகோதர சகோதரிகள் உறவினர்கள் ஆகியோரை கல்வி அறிவு பெற்றவர்களாகவும் பட்டதாரிகளாகவும் மாற்றுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் வாய்ப்பு வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் நம்மிடம் ஒரளவு இருந்தாலும் பெருவாரியான முஸ்லிம்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவதுமில்லை என்ற தனது ஆதங்கத்தை பல சூழ்நிலைகளில் தெரியப்படுத்தியுள்ளார்கள்.1991 ஆண்டின் புள்ளியில் கணக்கெடுப்பு விபரப்படி 52.2% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2001 ஆண்டில் 65.38%ஆக உயர்வு அடைந்தது ஆனால் இதில் முஸ்லிம்கள் எழுத்தறிவு 59.1% மட்டுமே ஆகும்.

காலத்தின் கட்டாயத்தை உணர்ந்த ஈமான் நிர்வாகம் 1991 ஆம் ஆண்டு முதல் முயற்சியாக ஒரு மாணவிக்கு பொறியியல் கல்விக்கு உதவித்தொகை வழங்கியது இதன் தொடர்ச்சியாக வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் ஈமான் கல்விக்குழுவில் தந்தை என்று ஈமான் கல்விக்குழுச் சகோதரர்களால் கண்ணியத்துடன் போற்றப்படும் E.T.A அஸ்கான் நிறுவன குழுமத்தின் கார்ஸ் இணை நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் P.S.M ஹபீபுல்லாஹ் அவர்கள் தலைமை பொறுப்பேற்று வழிநடத்துவதுடன் ஈமான் கல்விப்பணியானது சமுதாய விடியலுக்கான ஆக்கப்பூர்வமான சேவை என்று உணர்ந்து அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான்,பொதுச்செயலாளர் அல்ஹாஜ் A. லியாக்கத் அலி, இவர்கள் ஊக்கமளித்து வந்ததன் காரணத்தால் இன்று வரை உயர் கல்வி பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! முன்னாள் பொதுச்செயலாளர் என்ற பொறுப்போடு கல்விப்பணியையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி காட்டிய அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் அவர்களின் சீரிய பணிகளுடன் முன்னாள் கல்விக்குழுச் செயலாளரும், இந்நாள் பொதுச்செயலாளருமான அல்ஹாஜ் A.லியாக்கத் அலி அவர்களின் இணைந்த அணுகு முறைகளுடன் கூடிய இவர்களின் சீரிய செயல்பாடுகள் ஈமானின் கல்விப்பணியில் தனி முத்திரையை பதித்தது என்றால் அது மிகையாகாது.

அல்லாஹ்வின் பெரும் கிருபையால் கல்விக்குழுச் செயலாளர் அல்ஹாஜ் A . லியாக்கத் அலி அவர்களின் வழியில் செயலாளர்கள் பொறுப்பில் நானும் A . முஹம்மது நூர்தீன் அவர்களும் சில வருடம் பணியாற்றி பின் பணி நிமித்தம் காரணமாக அமெரிக்கா சென்றவுடன் கல்விக்குழுச் செயலாளர்கள் பொறுப்பை நானும் U. முஹம்மது ஹிதாயத்துல்லா அவர்களும் ஏற்று செயல்பட்டு வருகிறோம்.

பல பொது இயக்கங்களும் கல்விப்பணி செய்வதை நாம் அறிந்திருக்கின்றோம் ஆனால் நமது ஈமான் கல்விப்பணியை துடிப்புடன் ஒரு இயக்கமாகவே நடத்தி செல்லும் விதம் அனைவர்களின் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது கல்விக்குழுச் சகோதரர்களுடன் தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி அதன் வெற்றிக்கு பெரும்பங்கு வகுத்த செயல்மிக்க முன்னாள் கல்விக்குழுச் செயலாளரும் ஈமானின் இன்றைய பொதுச் செயலாளருமாகிய அல்ஹாஜ் A . லியாக்கத் அலி அவர்கள் கல்விப் பித்தராகவே மாறி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான கல்வி தாகம் கொண்டவர்களாக எங்களைப் போன்றவர்களை இன்றும் வழிநடத்தி கல்வியில் மிகுந்த ஈடுபாடுடன் தன்னை முழுமையுடன் உண்மையாகவே அர்ப்பணித்து அதே போல் மற்றவர்களையும் கல்விக்குழுச் சேவையில் ஈடுபாடு கொள்ள தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்கள் அவர்கள் பொறுப்பில் இருந்த போது கல்விக்குழுப் பணிகளில் நடந்த சில சம்பவ நிகழ்வுகளை இந்த நேரத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈமான் கல்விச்சேவையில் துபாயில் வாழும் அனைத்து சகோதரர்களின் பங்கும் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் தொடர்ந்து பல அலுவல்களுக்கிடையே நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் சமுதாய உடன் பிறப்புகளின் இல்லங்களுக்குச் சென்று பொருள் திரட்டுகிற பணியை பொதுச்செயலாளர் அல்ஹாஜ் A . லியாக்கத் அலி துணைத்தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் இவர்களின் நேரடி செயல்பாட்டில் ஒரு குழுவாகவே செயலாற்றிய விதமானது சமுதாயத்தின் மீது நேரடியான அக்கறையும் முன்னேற்றமும் மற்ற சகோதரர்களுக்கும் ஏற்பட வேண்டும் என்ற முனைப்பே ஆகும் அவரோடு அக்குழுவில் ( நாங்கள் இருவர் உள்பட) காயல் யஹ்யா மொய்தீன்,நைனார்பாளையம் சாதிக் பாட்சா, லெப்பைக்குடிக்காடு படேஷா பஷீர், பசுபதி கோவில் முஹம்மது ரபீக், குத்தாலம் அஷ்ரப் அலி, முஹம்மது முஸ்லிம், தோப்புத்துறை முஹம்மது நூர்தீன், மற்றும் இஸ்மாயில் ஹாஜியார் போன்றவர்களின் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு மூலம் என்றென்றும் மறக்க முடியாத நெஞ்சங்களாக காட்சி அளிக்கிறார்கள் அந்த மதிப்பு மிக்க உதவித்தொகைகள் மூலம் இன்று வரை கல்வி பயின்று வெளியேறியுள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டி உள்ளது இதில்,

பொறியியல் துறைகளில் - 70
மருத்துவம் -25
தொழில் நுட்ப மற்றும்
பாலிடெக்னிக் துறைகளில் -40
கலை மற்றும் அறிவியல்
சார்ந்த படிப்புகள் -80
பிற துறை சார்ந்த படிப்புகள் -85

என்று பல துறைகளிலும் மாணவ, மாணவியர்கள் தடம் பதித்து உள்ளது சிறப்புக்குரியது இதில் ஊனமுற்ற மாணவர்களும் உடல் நலிவுற்று வசதி வாய்ப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகளும் உலமாக்கள் மற்றும் முஅத்தின் பிள்ளைகளும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு ஆண்டும் +2 பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற மேற்படிப்பைத் தொடர இயலாத ஏழை எளிய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி பத்திரிகைகளில் அறிவிக்கப்பட்டு அதற்கான உதவித்தொகை விண்ணப்பங்களும் இணைய தளம் / ஈமானின் மண்டல பிரதிநிதிகள் மூலம் அளிக்கப்பெற்று தேவையான சான்றிதழ்களுடன் கிடைக்கப்பெறுகிற விண்ணப்பங்கள் மாணவரின் மதிப்பெண் விபரங்கள் குடும்ப சூழ்நிலைகள் போன்ற விபரங்கள் கல்விக்குழுவின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு பின் தகுதியானவர்களின் தேர்வு விபரங்கள் ஈமான் கல்விக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தாயக பிரதிநிதிகள் திருச்சி. ஜமால் முஹம்மது கல்லூரி முனைவர் பேராசிரியர் எம்.எம்.சாகுல் ஹமீது. மற்றும் சென்னை தொழில் அதிபர் கீழக்கரை அன்வர் மைதீன் ஆகிய கல்வி ஆர்வலர்களுக்கு அனுப்பப்பட்டு நேரடி தேர்வுகளுக்கு பின் அவர்களின் உண்மை நிலவரங்களும் அறியப்பட்டு அவர்களுக்கான உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாயகம் சென்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ். லியாக்கத் அலி அவர்கள் சென்னை மண்டல பிரதிநிதியுடன் நேர்முக தேர்வு நடைபெற்ற இடங்களுக்கு சென்று அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் மற்றும் மாணவ மாணவியர்களின் நேரடி விளக்கங்களை. மற்ற நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களின் ஏழ்மை மற்றும் சூழ்நிலைகள் காண்பவர்கள் கண்களில் செந்நீரை வரவழைக்கும் என்பதில் எந்தளவும் சந்தேகங்கள் இல்லை.

ஈமான் கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதங்கள் மற்ற ஈடுபாடுகள் வருகை பதிவுகள் போன்ற தகவல்கள் நேரடியாக கல்லூரியின் முதல்வர்கள் மூலம் கல்விக் குழுவிற்க்கு அளிக்கப்படுவதோடு அதன் அடிப்படையில் அவர்களுக்கு கல்விக்குழுத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் கல்விச் செயலாளர் முஹம்மது நூர்தீன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட மாணவர் நிலை அறியும் படிவம் ( IMAN STUDENT FEED BACK FORM ) அளிக்கப்பட்டு தொடர் உதவித் தொகைகள் மற்றும் சரியான ஆலோசனைகளும் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்ச்சி விகிதங்கள் மேம்பாடு அடைவதோடு இதன் மூலம் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் ஈமான் கல்விக்குழுவின் நேரடி பார்வையில் இருப்பதை அறிய முடிகிறது.

கல்விகுழுத் தலைவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப, ஈமான் மாணவ, மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் கடந்த 2002ஆம் ஆண்டில் முதன்முறையாக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, மற்றும் அய்மான் பெண்கள் கல்லூரிகளிலும் அதனைத் தொடர்ந்து சென்னை கிரஸெண்ட் பொறியியல் கல்லூரியிலும் நடத்தப்பட்டது இதில் ஈமானின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் லியாக்கத் அலி, மற்றும் கல்விக்குழுச் செயலாளர்களும், அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத்துல்லா, தமிழக பிரதிநிதிகள் பேராசிரியர். எம்.சாகுல் ஹமீது பேரா. டாக்டர் பிலால், மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு கல்லூரிகளில் பயிலும் ஈமானின் மாணவ, மாணவிகளையும் சந்தித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள் சென்னையில் சமுதாய ஆட்டோ ஓட்டுநரின் கல்வி ஊக்கத்தொகைக்கான நேரடி வேண்டுகோளை பரிசீலனை செய்து உடன் அதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் செயல்படுத்திய விதங்களை எண்ணும்போது சமுதாயத்தின் வளர்ச்சியில் ஈமானின் கல்விப்பணிகள் நல்லதோர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனும் போது நமக்கு மனநிறைவு ஏற்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டில் ஈமானின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ். குத்தாலம் லியாக்கத் அலி அவர்கள் வேலூர் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியின் மாவட்ட விளையாட்டுப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு அங்கு பயின்று வரும் ஈமான் மாணவ, மாணவியர்களை சந்தித்து ஆலோசனைகளுடன் நல்ல பல அறிவுரைகளையும் வழங்கி வந்தார்கள்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் செயலாளர் என்ற முறையில் நானும், மற்றும் முஹம்மது நூர்தீன், இவர்களுடன் அல்ஹாஜ். அன்வர் மைதீன் ஆகியோரும் வேலூர் சி. அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்குச் சென்று அங்கு பயின்று மென்பொருள் நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு தேர்வு பெற்று வேலைக்கான நியமன உத்தரவை பெற்ற ஈமான் உதவித்தொகை பெறும் மாணவியை வாழ்த்தியதோடு கால்லூரியின் தாளாளர் V.M.,லத்தீப் சாஹிப்,தலைவர் S. ஜியாவுத்தீன் அஹமது, மற்றும் கல்லூரி முதல்வர் ஜமீல் அஹமது ஆகியோருடன் இணைந்து மேலும் சிறந்து விளங்க நல்ல அறிவுரைகளை வழங்கி வந்தோம்.

ஈமான் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான உற்சாகம் அளிக்கும் விதமாக நமது சமுதாய கல்லூரிகள் சென்னை கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, திருச்சி M.I.E.T பொறியியல் கல்லூரி / பாலிடெக்னிக், மதுரை சேது பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி, வேலூர் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி, சென்னை தானிஷ் பொறியியல் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, ராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரி, கீழக்கரை தாஸீம் பீவி பெண்கள் கல்லூரி, திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி, ஈரோடு அல் அமீன் பாலிடெக்னிக், கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் போன்ற சமுதாய கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரத்யேகமாக அந்தந்த பாடப் பிரிவுகளுக்கேற்ப இடங்களை தந்து உதவுகிறார்கள். என்பதை இந்த நேரத்தில் மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறோம். சமுதாய கல்லூரி அல்லாது தகுதி அடிப்படையில் மற்ற கல்லூரிகளில் இடம் கிடைக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் துணை மருத்துவம், பத்திரிகை துறை, இந்திய ஆட்சி பணிகளுக்கான துறையில் கல்வி பெறுபவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது கல்விக்குழு தலைவர் P.S.M. ஹபிபுல்லாஹ், துணைத்தலைவர் அல்ஹாஜ். M. அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் அல்ஹாஜ்.A.லியாக்கத் அலி ஆகியோர்களின் ஆலோசனையின்படி கடந்த சில ஆண்டுகளாக சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களையும் வருடா வருடம் தேர்வு செய்து கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறச்செய்து மதநல்லிணக்கத்திற்கு ஈமானின் கல்வித்துறை ஒரு முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பெரிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டும் நமக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்ய வேண்டும் தமிழகத்தில் நமது சமுதாயத்தினரால் நடத்தப்படுகின்ற கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளும் உள்ளன. ஆனால் ஆரம்ப கல்வி அளிக்கும் தொடக்கப்பள்ளிகள் தேவையான அளவில் இல்லாதது குறையாகவே உள்ளது நம் சமுதாயத்திற்கென்று தொடக்கப்பள்ளிகள் போதிய அளவு ஏற்படுத்த சமுதாய கவலை கொண்டவர்கள் கூட்டாக செயல்படவேண்டும்.

சமுதாய வளர்ச்சியில் அக்கறையும் கவலையும் கொண்ட தனி மரியாதைக்குரிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ்.செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்கள் மற்றும் கல்விக்குழுத் தலைவர் அல்ஹாஜ். P.S.M ஹபீபுல்லாஹ் இவர்களின் ஆலோசனைப்படி ஈமான் அமைப்பின் கல்விப்பணியின் ஓர் சிறப்பு அங்கமாக இன்ஷா அல்லாஹ் தமிழகத்தின் மத்தியப்பகுதியான திருச்சியில் ஈமான் மேல்நிலைப்பள்ளி ஒன்றை தங்கும் விடுதி வசதியுடன் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் வாங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த சிறப்புமிக்க பணிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ். M. அப்துல் ரஹ்மான் , மற்றும் பலவகைகளிலும் தோளோடு தோள்நின்று ஒத்துழைப்பு அளித்து வரும் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ். குத்தாலம் ஏ.லியாக்கத் அலி , துணைத் தலைவர்கள் அல்ஹாஜ். எம். அப்துல் கதீம், அல்ஹாஜ். அஹமது முஹைதீன், பொருளாளர். அல்ஹாஜ். மீரா முஹைதீன், அல்ஹாஜ். S.M. பாரூக் சடையன் அமானுல்லா, யஹ்யா முஹையதீன், சாதிக் பாட்சா, முதுவை ஹிதாயத்துல்லாஹ், அனைவர் களையும் ஈமான் கல்விக்குழு நன்றியுடன் நினைவு கூறுகிறது. மென்மேலும் முன்னேற்றம் காண, சமுதாய பற்று கொண்ட ஆர்வலர்களையும், நற்சிந்தனை கொண்ட புரவலர்களையும் ஈமானின் கல்விக்குழு இத்தருணத்தில் அன்போடு நினைவு கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் ஈமானின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் வெற்றி பெற எங்களின் அவாவும் துவாவும்.

( ஈமான் அமைப்பின் முப்பதாம் ஆண்டு சிறப்பு மலர் 2006 )

www.imandubai.org

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


துபாய் ஈமான் அமைப்பு மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்தியது.

மானுடவசந்தம் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார்.

ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.
லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் த‌மிழ‌ன் தொலைக்காட்சியில் ஒளிப‌ர‌ப்பாகிவ‌ரும் மானுட‌ வச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி துபாயிலும் ஈமான் அமைப்பின் சார்பில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு ச‌கோத‌ர‌ ச‌முதாய‌ ம‌க்க‌ள் இஸ்லாம் குறித்த‌ த‌ங்க‌ள‌து ஐய‌ப்பாடுக‌ளுக்கு உரிய‌ விள‌க்க‌த்தை டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் மூல‌ம் பெற‌ வேண்டும் என‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. நாம் ப‌ல்வேறு ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தாலும் ம‌ன‌ங்க‌ளால் ஒத்த‌வ‌ர்க‌ள். ம‌னித‌நேய‌த்தை வ‌லியுறுத்தாத‌ ச‌முதாய‌ம் இல்லை. இத‌னைப் புரிந்து கொண்டு நாம் அனைவ‌ரும் ஒரு குடும்ப‌மாக‌ இணைந்து செய‌ல்ப‌ட‌ இந்நிக‌ழ்ச்சி பெரிதும் உத‌வும் என்ற‌ ந‌ன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட‌ வ‌சந்த‌ம் நிக‌ழ்ச்சியினை த‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்குகிற‌து.
ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லாஹ், இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக வெங்கடாச்சலம் ராமசாமி குருக்களும், கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பாக அருட்தந்தை பால் ரிச்சர்ட் ஜோசப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் அவ‌ர்க‌ள் த‌ன‌து வாழ்த்துரையில் டாக்ட‌ர் கே.வி.எஸ். அவ‌ர்க‌ளை தொலைக்காட்சி மூல‌ம் பார்த்து வ‌ந்த‌ நான் இன்று நேரில் பார்க்கும் வாய்ப்பை ஈமான் அமைப்பு ஏற்ப‌டுத்திக் கொடுத்துள்ள‌து. இன்றைக்கு திரும‌ண‌த்தின் போது வ‌ர‌த‌ட்ச‌ணை ஒரு முக்கிய‌ப் பிர‌ச்ச‌னையாக‌ இருந்து வ‌ருகிறது. தான் துபாய் ஈடிஏ அஸ்கான் ஜாய்ண்ட் மேனேஷிங் டைர‌க்ட‌ராக‌ இருந்து வ‌ருகிறேன். இதில் சுமார் 85,000 பேர் ப‌ணிபுரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். ஒரு முஸ்லிம் நிறுவ‌ன‌மாக‌ இருந்தாலும் இங்கு அதிக‌மாக‌ ச‌கோத‌ர‌ ச‌முதாய‌த்த‌வ‌ரே அதிக‌ம் ப‌ணிபுரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். ந‌ம்மிடையே உள்ள‌ ந‌ல்லிண‌க்க‌ம் க‌ல‌வ‌ர‌ம் ம‌ற்றும் வெறி மாறுவ‌த‌ற்கு கார‌ண‌ம் என்ன‌ என்ப‌த‌னை டாக்ட‌ர் அவ‌ர்க‌ள் த‌ன‌து கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சியில் தெளிவு ப‌டுத்த‌ வேண்டும் என‌க் கேட்டுக் கொள்வ‌தாக‌க் குறிப்பிட்டார்.
இந்து ச‌முதாய‌ப் பிர‌திநிதியாக‌ப் ப‌ங்கேற்ற‌ பால‌க்காடு வெங்க‌டாச்சல‌ம் ராம‌சாமி குருக்க‌ள் அவ‌ர்க‌ள் த‌ன‌து உரையில் மானிட‌ப்பிற‌வியான‌து ஆண், பெண் என‌ இரு சாதிக‌ளைக் கொண்ட‌து. மானிட‌ வ‌ர்க்க‌ உய‌ர்வுக்கு இய‌ற்கையின் மீது பிரிய‌ம் கொள்ள‌ வேண்டும். ம‌னித‌னால் க‌ண்ட‌றிய‌முடியாத‌ ஒரு சூப்ப‌ர் ப‌வ‌ர் ச‌க்தி அதுவே க‌ட‌வுள். மார்க்க‌ங்க‌ள் ப‌லவாக‌ இருந்தாலும் நொக்க‌ம் யாவும் ஒன்றே. இன்றைக்கு ஏற்ப‌ட்டுள்ள‌ பொருளாதார‌ ம‌ந்த‌நிலை குறித்து க‌வ‌லை கொள்ளாது உறுதியான‌ ந‌ம்பிக்கையுட‌ன் இறைவ‌னைப் பிரார்த்தித்து க‌டின‌மாக‌ உழைத்தால் ந‌ல்ல மாற்ற‌ங்க‌ள் ஏற்ப‌டும். உங்க‌ள் வாழ்வில் வ‌ச‌ந்த‌ம் ஏற்ப‌ட‌ இந்ந‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நம‌க்கு உத‌வும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை என்றார்.
கிறிஸ்த‌வ‌ ச‌முதாய‌ப் பிர‌திநிதியாக‌ ப‌ங்கேற்ற‌ பால் ரிச்ச‌ர்ட் ஜோச‌ப் ம‌னித‌நேய‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ழ‌ங்கி வ‌ரும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளுக்கும், இத்த‌கைய‌ நிக‌ழ்வுக்கு ஏற்பாடு செய்த‌ ஈமான் ச‌ங்க‌த்தின‌ருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளுக்கு பி.எஸ்.எம்.ஹ‌பிபுல்லாஹ், எம். அப்துல் க‌த்தீம், ஏ. அஹம‌து முஹைதீன், ஈடிஏ அஸ்கான் ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம்.அக்ப‌ர் கான், ச‌ம்சுதீன் காக்கா உள்ளிட்டோர் நினைவுப் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கின‌ர்.
ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன் அவ‌ர்க‌ள் ஈமான் அமைப்பின் சார்பில் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளுக்கு நினைவுப் ப‌ரிசை வ‌ழ‌ங்கி கௌர‌வித்தார். த‌ன‌து வாழ்த்துரையில் இறைவ‌ன‌ ம‌னித‌னுக்கு ப‌ண‌த்தை வ‌ழ‌ங்கிய‌தும் அவ‌னைப் புக‌ழ்கிறான். ஆனால் வ‌ச‌திக்குறைவாக‌ப் ப‌டைத்த‌தும் அவ‌னை இக‌ழ்கிறான். என‌வே ப‌ண‌ம் இறைவ‌னிட‌ம் வ‌ந்த‌ ஒரு சோத‌னைப் பொருள் என‌ப‌த‌னை உண‌ர‌ந்து வாழ‌வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை ர‌த்தின‌ச் சுருக்க‌மாக‌ எடுத்துரைத்தார்.
மானுட வசந்தம் நிகழ்ச்சியின் நெறியாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள் மானுட வசந்தம் நிகழ்ச்சி குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் விவரித்தார். ஈமான் என்றால் ந‌ம்பிக்கை, இறைந‌ம்பிக்கை என‌ப் பொருள்ப‌டும். அத்த‌கைய‌ பெருமைக்குச் சொந்த‌க்கார‌ர்க‌ளாகிய‌ துபாய் ஈமான் அமைப்பின‌ர் இந்திய‌ ச‌முதாய‌த்தினர்க்காக‌ ப‌ல்வேறு க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ளை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து த‌ன்ன‌மில்லாத‌ ப‌ணியினைப் பாராட்டி வாழ்த்துவ‌தோடு பிரார்த்திக்கிறேன்.
பிர‌வாசி என்றால் வெளிநாடு வாழ் இந்திய‌ர். வெளிநாடு வாழ் இந்திய‌ர்க‌ள‌து முத‌லீட்டைக் க‌வ‌ர‌ மாநாடு ந‌ட‌த்துகிறார்க‌ள் எனில் அங்கு ஜ‌னாதிப‌தியும் இருப்பார். பிர‌த‌ம‌ரும் இருப்பார். இதிலிருந்து வெளிநாடு வாழ் இந்திய‌ர‌து முக்கிய‌த்துவ‌த்தை உண‌ர‌லாம். பிற‌ந்த‌ நாட்டுக்காக‌வும், புகுந்த‌ நாட்டுக்காக‌வும் த‌ங்க‌ள‌து உன்ன‌த‌மான‌ உழைப்பினை அளித்து வ‌ரும் உங்க‌ளைப் பாராட்டுகிறேன்.
இந்திய‌ வ‌ள‌ர்ச்சிக்கு நீங்க‌ள் காட்டி வ‌ரும் அக்க‌றை தொட‌ர வாழ்த்துகிறேன்.
குருக்க‌ள் அவ‌ர்க‌ள் த‌னது பாலக்காட்டுத் த‌மிழிலே பொருளாதார‌ப் பின்ன‌டைவு குறித்து குறிப்பிட்டார்க‌ள். பொருளாதார‌ நிபுண‌ர்க‌ள் இதுகுறித்து ஆய்வு செய்து இந்நிலைக்கு கார‌ண‌ம் என்ன‌ என்ப‌த‌னைக் கூற‌வேண்டிய‌து அவ‌ர்க‌ள‌து க‌ட‌மையாகும்.
மோத‌ல்க‌ள் ஏன் ஏற்ப‌டுகிற‌து. ந‌மக்குள் பேசிக்கொள்ளாத‌த‌ன் கார‌ண‌மாக‌வே ஏற்ப‌டுகிற‌து. க‌ண‌வ‌ன் ம‌னைவியுட‌னும், த‌க‌ப்ப‌ன் பிள்ளையுட‌னும், இரண்டு ச‌முதாய‌த்தின‌ர் ஒருவ‌ருக்கொருவ‌ரும் பேசிக்கொண்டால் பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும்.
க‌ண‌வ‌ன்,ம‌னைவி எப்பொழுது பேசுகின்ற‌ன‌ர் என்றால் தொலைக்காட்சித் தொட‌ரின் போது க‌ம‌ர்ஷிய‌ல் பிரேக் விடும் போது தான் பேசுகின்ற‌ன‌ர். க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் சில‌ இல்ல‌ங்க‌ளில் ப‌ணிக்குச் செல்கின்ற‌ன‌ர். இத‌னால் பிள்ளைக‌ளுட‌ன் பேசுவ‌த‌ற்கான‌ நேர‌ம் கிடைப்ப‌தில்லை.
மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சியின் நோக்க‌மே ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்துவ‌து தான். என‌வே ஈகோவைக் க‌ளைந்து விட்டு ஒருவ‌ருக்கொருவ‌ர் ம‌ன‌ம்விட்டுப் பேச‌ வேண்டும்.
இங்கே என்ன‌ நிக‌ழ்கிற‌தென்றால் க‌ல‌வ‌ர‌த்திற்குப் பின்ன‌ர் தான் இரு ச‌முதாய‌த்த‌வ‌ர் பேசுகின்ற‌ன‌ர். அத‌ற்கு முன்ன‌ரே இவ‌ர்க‌ள் பேசியிருந்தால் இதுபோன்ற‌ நிக‌ழ்வுக‌ள் த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.
ம‌னித‌னுக்குத் தேவை வாழ்வாதார‌மும், வ‌ழிகாட்டு நெறியும். எந்த‌ ம‌னித‌னும் கோட்பாடு இல்லாம‌ல் வாழ‌முடியாது. ம‌னித‌னைப் ப‌டைத்த‌ இறைவ‌ன் அவ‌ன் நிம்ம‌தியாக‌ வாழவேண்டும் அத‌ன் மூல‌ம் ம‌னித‌ ச‌முதாய‌ம் நேர்வ‌ழி பெற‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தின் அடிப்ப‌டையில் முத‌ல் ம‌னித‌ராகிய‌ ஆத‌த்தையே முத‌ல் தூத‌ராக‌ ஆக்கிய‌ருளினான்.
இஸ்லாம் என்றால் அமைதி இத‌னைப் பின்ப‌ற்றினால் நேர்வ‌ழி கிடைக்கும். ஒரு ம‌னித‌னுக்கு அமைதி கிடைத்தால் உல‌கில் அவ‌னுக்கு இத‌னைவிட‌ மிகப்பெரிய‌ சொத்து எதுவும் இருக்க‌ முடியாது.
த‌ன‌வ‌ந்த‌வ‌ர்க‌ளை விட‌ அன்றாட‌ங்காச்சியாக‌ இருக்க‌க்கூடிய‌வ‌ன் ப‌டித்த‌வுன் நிம்ம‌தியாக‌ உற‌ங்கிவிடுகிறான். இஸ்லாத்தை பின்ப‌ற்றினால் ம‌னித‌னுக்கு அமைதி கிடைக்கும் என‌ இறைவ‌ன் வாக்க‌ளிக்கிறான். சில‌ கோட்பாடுக‌ளில் த‌னி ம‌னித‌ அமைதி குறித்தும், சில‌வ‌ற்றில் ச‌முதாய‌ அமைதி குறித்தும் கூறுவார்க‌ள். ஆனால் இஸ்லாம் இவ்விர‌ண்டையும் போதிக்கிற‌து.
நெஞ்சுக்கு நீதி செலுத்த‌ வேண்டும். ஆன்மாவுக்கு தீங்கிழைத்த‌ல் கூடாது. ச‌முதாய‌ உண‌ர்வுக‌ளை, உரிமைக‌ளை காய‌ப்ப‌டுத்த‌க்கூடாது. அநீதிக‌ள் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.
மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ ஒன்ப‌து ஆண்டுக‌ளாக‌ தொலைக்காட்சியின் வாயிலாக‌ த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌கிற்கு ம‌னித‌நேய‌க் க‌ருத்துக்க‌ளை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. அமைதி பெறுக‌ ! அமைதி த‌ருக‌ ! என‌க்கூறி மானுட‌ வ‌சந்த‌ம் நேய‌ர்க‌ல் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு விரிவான‌, விள‌க்க‌மான‌ ப‌திலை வ‌ழ‌ங்கினார் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து.
ஈமான் அமைப்பின் ஊட‌க‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார். விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர். இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்க‌த்தில் 500க்கும் மேற்ப‌ட்டோர் குழுமியிருந்த‌ன‌ர். பெண்க‌ளும் அதிக‌ அள‌வில் ஆர்வ‌முட‌ன் வ‌ந்திருந்த‌ன‌ர். ப‌ல‌ர் இட‌ம் கிடைக்காம‌ல் திரும்பிச்சென்ற‌ன‌ர்.
ச‌‌‌க்தி எஃப்.எம், வானொலி, ஆசியாநெட் வானொலி, த‌ட்ஸ்த‌மிழ்.காம், தினம‌ல‌ர் வெளிநாட்டு வாழ் இந்திய‌ர் செய்திக‌ள், அதிகாலை.காம், ஈமான்டைம்ஸ் கூகுள் குரூப், முதுவைவிஷ‌ன்.காம்,காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.காம்.காய‌ல்ப‌ட்ட‌ண‌ம்.இன், த‌னிந‌பர் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் உள்ளிட்ட‌வ‌ற்றின் மூல‌ம் ம‌க்க‌ளுக்கு செய்திக‌ள் அதிக‌ அள‌வில் சென்ற‌டைந்த‌தும் இத‌ற்குக் கார‌ண‌ம்.

செய்தித் தொகுப்பு : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது துபாய் வருகை : ஈமான் சங்கத்தினர் வரவேற்பு




டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது துபாய் வருகை : ஈமான் சங்கத்தினர் வரவேற்பு


துபாய் ஈமான் அமைப்பு வெள்ளிக்கிழமை ( 27.02.2009 ) வெள்ளிக்கிழமை மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் 26.02.2009 அன்று காலை வருகை புரிந்த டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்வில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்று டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது மற்றும் அவரது துணைவியாரையும் வரவேற்றனர்.

துபாய் ஈமான் மீலாதுந்ந‌பி விழா சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாய் ஈமான் மீலாதுந்ந‌பி விழா சிற‌ப்புச் சொற்பொழிவு
காய‌ல் ஆலிம் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை
அஸ்ஸலாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )
க‌ட‌ந்த‌ 33 ஆண்டுக‌ளாக‌ ந‌ம் ஈமான் ( www.imandubai.org ) ச‌ங்க‌ம் இய‌ங்கி வ‌ருவ‌தையும், இத‌ன் மூல‌ம் ப‌ல்வேறு ச‌முதாய‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தையும் தாங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஆண்டும் புனித‌ மீலாது விழா ந‌ட‌த்த‌ப்பட்டு அத‌ன் மூல‌ம் அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் இந்நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடு செய்வ‌து வழ‌க்க‌ம்.
ச‌ன்மார்க்க‌க் க‌ருத்துக்க‌ளையும், ச‌முதாய‌ உண‌ர்வுக‌ளையும் இதுபோன்ற‌ நிக‌ழ்ச்சிக‌ளின் வாயிலாக‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து வைப்ப‌து இத‌ன் குறிக்கோள்.
இவ்வ‌கையில் இன்ஷா அல்லாஹ் இவ்வ‌ருட‌ புனித‌ மீலாது விழா நிக‌ழ்ச்சிக்கு காயல்ப‌ட்ட‌ண‌த்தைச் சார்ந்த‌ ஆலிம் பெருந்த‌கை ம‌வ்ல‌வி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ஸ‌லுல் உல‌மா T.S.A. செய்ய‌து அபுதாஹிர் ஆலிம் ம‌ஹ்ழ‌ரி பாஜில் ஜமாலி M.A., அவ‌ர்க‌ள் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை த‌ர‌ இருக்கிறார்க‌ள்.
ர‌பியுல் அவ்வ‌ல் பிறை 1 முத‌ல் ( 25 பிப்ர‌வ‌ரி 2009 ) பிறை 11 வ‌ரை ( 07 மார்ச் 2009 ) தேரா கோட்டைப் ப‌ள்ளியில் ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிற‌கு சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையுட‌ன் இணைந்து தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ள‌து.
பிறை 12 ( 08 மார்ச் 2009 ) அன்று இஷாவிற்குப் பிற‌கு லூத்தா ஜாமி ஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) புனித‌ மீலாது விழா சிற‌ப்புப் பேருரை ஆலிம் அவ‌ர்க‌ளால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.
பிறை 1 முத‌ல் 12 வ‌ரை ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிற‌கு குவைத் ப‌ள்ளியில் ம‌வ்லீது ம‌ஜ்லிஸ் ந‌டைபெற‌ இருக்கிற‌து.
பிறை 12 ( 09 மார்ச் 2009 ) அன்று அபுதாபி இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( அய்மான் ) சார்பில் மீலாது விழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.
மேற்க‌ண்ட‌ அனைத்து நிக‌ழ்ச்சிக‌ளிலும் பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ வேண்டுமாய் அன்புட‌ன் அழைக்கிறோம்.
ஏ. லியாக்க‌த் அலி
பொதுச்செய‌லாள‌ர்
ஈமான்
T.S.A. ய‌ஹ்யா முஹைய‌த்தீன்
விழாக்குழு செயலாள‌ர்
ஈமான்
050 58 53 888

Wednesday, February 25, 2009

ஈமான் இணையத்தள மாதிரி


அமீரகத்தில் மீலாது நபியை முன்னிட்டு மார்ச் 8 அன்று அரசு விடுமுறை

அமீரகத்தில் மீலாது நபியை முன்னிட்டு மார்ச் 8 அன்று அரசு விடுமுறை

அமீரகத்தில் மீலாது நபியினை முன்னிட்டு மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமையன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு நிறுவனங்களுக்கு வார விடுமுறையான வெள்ளி மற்றும் சனிக்கிழமையுடன் ஞாயிறும் விடுமுறை கிடைக்கிறது.


UAE declares public sector holiday to mark the birthday of Prophet Mohammad (PBUH)


WAM
Published: February 25, 2009, 16:56

Dubai: The UAE has declared Sunday, March 8, a holiday for the public sector to mark the birthday of Prophet Mohammad (PBUH).

According to a circular issued by Humaid Mohammad Obaid Al Qutami, Minister of Health, the public sector will get a one-day holiday on March 8 to celebrate Prophet Mohammad’s (PBUH) birthday.

All federal ministries, public departments and institutions will enjoy a long weekend.



Al Qutami seized the opportunity to congratulate President His Highness Shaikh Khalifa Bin Zayed Al Nahyan and His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, on the glorious occasion.

He also congratulated Their Highnesses the Supreme Council Members and Rulers of the Emirates as well as both the Arab and Muslim nations on the occasion.




தகவல் உதவி : கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழ்

Monday, February 23, 2009

துபாய் ஈமான் மீலாதுந்ந‌பி விழா சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாய் ஈமான் மீலாதுந்ந‌பி விழா சிற‌ப்புச் சொற்பொழிவு

காய‌ல் ஆலிம் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை

அஸ்ஸலாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

க‌ட‌ந்த‌ 33 ஆண்டுக‌ளாக‌ ந‌ம் ஈமான் ( www.imandubai.org ) ச‌ங்க‌ம் இய‌ங்கி வ‌ருவ‌தையும், இத‌ன் மூல‌ம் ப‌ல்வேறு ச‌முதாய‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தையும் தாங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஆண்டும் புனித‌ மீலாது விழா ந‌ட‌த்த‌ப்பட்டு அத‌ன் மூல‌ம் அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் இந்நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடு செய்வ‌து வழ‌க்க‌ம்.

ச‌ன்மார்க்க‌க் க‌ருத்துக்க‌ளையும், ச‌முதாய‌ உண‌ர்வுக‌ளையும் இதுபோன்ற‌ நிக‌ழ்ச்சிக‌ளின் வாயிலாக‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து வைப்ப‌து இத‌ன் குறிக்கோள்.

இவ்வ‌கையில் இன்ஷா அல்லாஹ் இவ்வ‌ருட‌ புனித‌ மீலாது விழா நிக‌ழ்ச்சிக்கு காயல்ப‌ட்ட‌ண‌த்தைச் சார்ந்த‌ ஆலிம் பெருந்த‌கை ம‌வ்ல‌வி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ஸ‌லுல் உல‌மா T.S.A. செய்ய‌து அபுதாஹிர் ஆலிம் ம‌ஹ்ழ‌ரி பாஜில் ஜமாலி எம்.ஏ. அவ‌ர்க‌ள் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை த‌ர‌ இருக்கிறார்க‌ள்.

ர‌பியுல் அவ்வ‌ல் பிறை 1 முத‌ல் ( 25 பிப்ர‌வ‌ரி 2009 ) பிறை 11 வ‌ரை ( 07 மார்ச் 2009 ) தேரா கோட்டைப் ப‌ள்ளியில் ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிற‌கு சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையுட‌ன் இணைந்து தொட‌ர் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ள‌து.

பிறை 12 ( 08 மார்ச் 2009 ) அன்று இஷாவிற்குப் பிற‌கு லூத்தா ஜாமி ஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) புனித‌ மீலாது விழா சிற‌ப்புப் பேருரை ஆலிம் அவ‌ர்க‌ளால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

பிறை 1 முத‌ல் 12 வ‌ரை ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிற‌கு குவைத் ப‌ள்ளியில் ம‌வ்லீது ம‌ஜ்லிஸ் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

பிறை 12 ( 09 மார்ச் 2009 ) அன்று அபுதாபி இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( அய்மான் ) சார்பில் மீலாது விழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மேற்க‌ண்ட‌ அனைத்து நிக‌ழ்ச்சிக‌ளிலும் பொதும‌க்க‌ள் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ வேண்டுமாய் அன்புட‌ன் அழைக்கிறோம்.

ஏ. லியாக்க‌த் அலி
பொதுச்செய‌லாள‌ர்
ஈமான்

T.S.A. ய‌ஹ்யா முஹைய‌த்தீன்
விழாக்குழு செயலாள‌ர்
ஈமான்
050 58 53 888

Saturday, February 21, 2009

கவனமாகயிரு

கவனமாகயிரு


கிளியனூர் இஸ்மத்

இளைஞனே…
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…
மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…
பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…
கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…
சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…
எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…
தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…
வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...
மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…
நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!

www.kiliyanur-ismath.blogspot.com


A.Mohamed Ali
ismath kiliyanur
dateSun, Feb 22, 2009 at 5:47 AM
subjectRe: கவனமாகயிரு

Dear brothers Hidayath and brother Kiliyanur Ismath,

Assalmau alaikkum varah...

The Poem " Take Care" ( Gavanamai Iru) is one of the best I have recently read. I wish this must be circulated especially the student community all over India and if possible all over world.

I seek your permission to print this as hand outs/bills so that I can distribute them after Jum'a Prayers or during social functions in Chennai.

Since the name of the person distributing must appear on such hand outs, May I mention my name as Compiled by.

Vassalam

Valoothoor A.Mohamed Ali
Chennai

shabath ahamed
dateSun, Feb 22, 2009 at 8:07 AM
subjectRe: கவனமாகயிரு

Very Nice and venture advice for youth.

ismath kiliyanur
dateSun, Feb 22, 2009 at 10:20 AM
subjectRe: கவனமாகயிரு

Assalamu Alaikkum

Thanks Brother

ismath

Friday, February 20, 2009

இந்தியா முழுவதும் 22 போலி பல்கலைக்கழகம் யு.ஜி.சி. எச்சரிக்கை

இந்தியா முழுவதும் 22 போலி பல்கலைக்கழகம் யு.ஜி.சி. எச்சரிக்கை

இந்தியா முழுவதும் மொத்தம் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.

போலி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில சட்டசபை சட்டம் அல்லது யுஜிசி சட்டப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் நடத்தி பட்டங்களை வழங்க முடியும்.

ஆனால், கல்வி சேவை அளிப்பதாக சங்கங்களின் பெயரில் பதிவு செய்து விட்டு பலர் பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றனர். இதுபோல் நாடு முழுவதும் மொத்தம் 22 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதை யு.ஜி.சி. கண்டுபிடித்துள்ளது. அவற்றின் பெயர்களை யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு: டி.டி.பி சமஸ்கிருத பல்கலைக்கழகம், திருச்சி. டெல்லி: வாரணாசிய சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், ஏடிஆர் சென்ட்ரிக் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி, இன்டியன் இண்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங். கர்நாடகா: பதகன்வி சர்கார் உலக திறந்தவெளி பல்கலைக்கழக கல்வி சங்கம், பெல்காம். கேரளா: செயின் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம். மத்தியப் பிரதேசம்: கேசர்வனி வித்யாபித், ஜபல்பூர். மகாராஷ்டிரா: ராஜா அராபிக் பல்கலைக்கழகம், நாக்பூர். மேற்கு வங்கம்: இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசன். உத்தரப்பிரதேசம்: மகிளா கிராம் வித்யாபித், இந்தியன் கல்வி கவுன்சில், எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தவெளி பல்கைலக்கழகம், இந்திரபிரஸ்தா சிக்ஷா பரிஷத், குருக்கள் விஸ்வ வித்யாலயா.

Wednesday, February 18, 2009

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாய் ஈமான் அமைப்பு ( www.imandubai.org ) 06.03.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் மீலாத் பேச்சுப் போட்டியினை நடத்த இருக்கிறது.

அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை,எளிமை,எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒரு துணைத் தலைப்பில் உரை நிகழ்த்தலாம்.

போட்டியில் வெற்றிபெறுவோருக்கு துபாய் - சென்னை - துபாய் செல்ல எமிரேட்ஸ் விமான பயணச்சீட்டும், லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கும் எட்டு கிராம் தங்க நாணயமும், அல் மஷ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரங்கள் மூன்று நபருக்கும், ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் வழங்கும் திர்ஹம் ஆயிரம் பரிசுக் கூப்பனும், இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம் 500 க்கான பரிசுக் கூப்பனும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் திர்ஹம் 200 க்கான பரிசுக் கூப்பன் பத்து பேருக்கும் வழங்கப்படும்.

போட்டியாளர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம். போட்டியாளர் அரங்கினுள் 15 நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 28 பிப்ரவரி 2009

மேலதிக விபரங்களுக்கு : 050 51 96 433 / 050 467 4399 / 050 58 53 888 / 050 2533 712

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

தேரிழந்தூரில் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்வி நிறுவ‌ன‌ம் அமைப்ப‌த‌ற்கான‌ ஆலோச‌னைக் கூட்ட‌ம்

தேரிழந்தூரில் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்வி நிறுவ‌ன‌ம் அமைப்ப‌த‌ற்கான‌ ஆலோச‌னைக் கூட்ட‌ம்


தேரிழ‌ந்தூரில் உய‌ர் தொழில்நுட்ப‌ க‌ல்வி நிறுவ‌ன‌ம் அமைவ‌த‌ற்கான‌ ஆலோச‌னைக் கூட்ட‌ம் 20.02.2009 வெள்ளிக்கிழ‌மை காலை 9.30 ம‌ணிய‌ள‌வில் அர்ர‌ஹீமிய்யா அர‌பிக் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

கும்ப‌கோண‌ம் ந‌க‌ர‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஏ. ஜிர்ஜிஸ் த‌லைமை தாங்குகிறார். ஏ.ரூபியா கிராஅத் ஓதுகிறார்.

ஏ. அசர‌ப் அலி, ஏ.அப்துல் ஹை, ஏ.அப்துல் பாரி, ஏ. அப்துல் ர‌ஹீம், ஏ.ஹாஜா க‌மால், கே.எம்.பி. முஹ‌ம்ம‌து ச‌லீம் ம‌ற்றும் ஹெச். ஹ‌ஸ்புல்லாஹ் ஆகியோர் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.

இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ், முன்னாள் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் பி. க‌ல்யாண‌ம், ஒன்றிய‌ப் பெருந்த‌லைவ‌ர் கோ.சி. ம‌திய‌ழ‌க‌ன் உள்ளிட்டோர் சிற‌ப்பு அழைப்பாள‌ர்க‌ளாக‌ க‌ல‌ந்து கொள்கின்ற‌ன‌ர்.

ஏ. முஹ‌ம்ம‌து ர‌ஃபிக் ந‌ன்றியுரை நிக‌ழ்த்துகிறார்.

ச‌முதாய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு அரிய‌ ஆலோச‌னைக‌ளை வழ‌ங்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

கூட்ட‌த்திற்கான‌ ஏற்பாடுக‌ளை தேரிழ‌ந்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ம‌ற்றும் என்.ஆர்.இ. க‌ல்விக்குழு ஆகியோர் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

Sunday, February 15, 2009

கிருஷ்ணகிரியில் பிப். 17-ல் உருது மாநாடு: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் பிப். 17-ல் உருது மாநாடு: ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்பு


கிருஷ்ணகிரி, பிப். 14: கிருஷ்ணகிரியில் பிப். 17-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான உருது மாநாட்டில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்கவுள்ளார்.

இதுகுறித்து பஸ்மே அதப் அமைப்பின் தலைவர் முக்தார் பத்ரி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

பஸ்மே அதப் எனும் உருது இலக்கியச் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான உருது மாநாடு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் செவ்வாய்க்கிழமை (பிப். 17-ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தொடங்கி வைத்து 7 உருது நூல்களை வெளியிடுகிறார்.

மாநாட்டில் உருது கவி, கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உருது பள்ளிகளில் 75 வருடங்களைக் கடந்த 40 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக யுனானி மருத்துவத் துறையில் சேவையாற்றி வரும் டாக்டர் சலாவுதீனை கெüரவிக்கப்படுகிறார் என்றார்.

பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை (எ) துரைசாமி, டாக்டர் சலாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, February 12, 2009

An evening with Dr. K.V.S.Habeeb Muhammad

An evening with Dr. K.V.S.Habeeb Muhammad


The event: A splendid tamil language inter-action programme

( Maanuda vasantham) for non-muslim brothers aimed at removing

the misconception about ISLAM and promoting peace and harmony

in the society.


The Venue: Indian Consulate, Dubai


The time: Insha Allah 27th Feb 2009, 6.00 p.m.


A briefing upon the Speaker :


Dr.KVS , a Chennai based scholar/thinker who plays an important

role in the IFT Islamic Colloquium. A soft spoken, well attired, a credible personality whose perspective , brilliant analysis and modern approach have earned him a high reputation even among non-muslim brothers around the globe.

Please do attend this rare, insightful and enlightening discussion.



Organised by: IMAN , Dubai

Monday, February 9, 2009

வெற்றி வேண்டுமா ?

வெற்றி வேண்டுமா ?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!!
ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.
எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.
”என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?” என ஆசையாகக் கேட்டார். “இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை” என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.. சிறிது நேரத்திற்குப் பிறகு, “இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்” என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், “சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?” என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

”மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை” என்றார் முதியவர். மன்னரும் சரி என்று “ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்” என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள்.. ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

“மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை” என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?” என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

“மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்” என்று அந்த முதியவர் கூறினார்.

ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

தொழுகையின் போதும், நாம் ஆண்டவனோடு ஒன்றிப்போக வேண்டும். அப்படிச் செய்தால் நம் துஆ நிறைவேறும். வெறும் முணுமுணுத்தால் போதாது. அதோடு ஒன்றிப் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டு வேலையாக இருந்தாலும், அலுவலக வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

நன்றி :

இனிய திசைகள்
பிப்ரவரி 2009

Ramesh Viswanathan
dateMon, Feb 9, 2009 at 4:18 PM
subjectFW: தன்னம்பிக்கை க���்டுரை - வெற்றி வேண்டுமா ?

VERY NICH STORY.

navaneetha krishnan
dateSun, Feb 8, 2009 at 9:41 PM
subjectRe: தன்னம்பிக்கை கட்டுரை - வெற்றி வேண்டுமா ?

வணக்கம்

இந்தக்கட்டுரை வேறெதுவும் பத்திரிகைகளில் வந்ததா? மறுபிரசுமா? புதியதா? புதியதென்றால் கட்டுரையின் ஆசிரியர் யார்? நீங்கள்தானா? என்பதை தெரிவிக்கவும். பிரசுரத்திற்கு ஏதுவாக இருக்கும். நன்றி!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

mohammed abdul
dateMon, Feb 9, 2009 at 5:57 PM
subjectRe: தன்னம்பிக்கை கட்டுரை - வெற்றி வேண்டுமா ?

Assalamu Alaikum

I have received your message,
Very nice and interesting one.
It will useful for all our community people that we have to concentrate on all our performances to succeed in that.

May Allah bless you and your family for the good things.

With Regards,

Mohamed Abdullah A
055-7492567

Sunday, February 8, 2009

துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன் நிர்வாகிக‌ள் தேர்வு

துபாயில் கொடிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன் நிர்வாகிக‌ள் தேர்வு

துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன் நிர்வாகிக‌ள் தேர்வு வெள்ளிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

புதிதாக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ நிர்வாகிக‌ள் விப‌ர‌ம் வ‌ருமாறு : கௌர‌வ‌த் த‌லைவ‌ராக‌ எம். ஜெஹ‌ப‌ர் ஷெக் அலாவுதீன், த‌லைவ‌ராக‌ எம்.ஏ. முஹ‌ம்ம‌து அப்துல் ஃப‌த்தாஹ் ( 050 7499427 ) , துணைத்த‌லைவ‌ராக‌ ஜே. சிராஜுதீன், செய‌லாள‌ராக‌ கே. சுல்தான் அப்துல் காத‌ர் ( 050 5783 703 ) , துணைச்செய‌லாள‌ராக‌ ஆர் .இன்சான் அலி, பொருளாள‌ராக‌ ஏ. ஹுமாயுன் க‌பீர், துணைப் பொருளாள‌ராக‌ ஏ. செய்ய‌து ப‌ஹ்ருதீன், த‌ணிக்கையாள‌ராக‌ ஐ. குத்புதீன், செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ளாக‌ கே. முஹ‌ம்ம‌து ர‌ஸ்வி, எஸ். ப‌ஷீர் அஹ‌ம‌து, ஜி. முஹ‌ம்ம‌து க‌ஸ்ஸாலி உள்ளிட்டோர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப். 7: வேளாண் பல்கலை. தொலைநிலைக் கல்வி மூலமாக வழங்கும் சான்றிதழ் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் பாடங்களை தொலைநிலைக் கல்வியில் வேளாண் பல்கலை. வழங்க உள்ளது.

பயிற்சிக் காலம் 6 மாதங்கள். ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இப் பாடங்களில் சேரலாம்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இயக்குநர், தொலைதூரக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை-641 003 என்ற முகவரியில் பெறலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 0422-6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கான நேரடிச் சேர்க்கை மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது என்றார்.

Monday, February 2, 2009

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2009, 15:15 [IST]
இலவச நியூஸ் லெட்டர் பெற

டெல்லி: மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு சமமாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசாக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், சிபிஎஸ்இ மாணவ, மாணவியருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளன.

உதாரணத்திற்கு மதரசாவில் ஒரு மாணவன் ஐந்தாவது வகுப்பு படிப்பதாக இருந்தால், அதே வயதுடைய சிபிஎஸ்இ மாணவன், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான்.


இதனால் மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மத்திய அரசு கூறப்பட்டு வந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை, சிபிஎஸ்இ சான்றிதழ்களுக்கு நிகராக மதிப்பிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதரசாக்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிகரான அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அகமது சிராஜ் என்ற 13 வயது மாணவன் டெல்லி சாந்தினி சவுக் மதராசாவில் 5ம் வகுப்பு படிக்கிறார். ஆனால் மற்ற பள்ளிகளில் பயிலும் இவன் வயதுடைய மாணவர்கள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிராஜ் இன்னும் மூன்று ஆண்டுகளில் கல்லுரியில் சேர வேண்டும். ஆனால் இவர் இதுவரை மத புத்தகங்களை மட்டுமே படித்துள்ளார். கல்லுரியில் தான் முதன்முறையாக ஆங்கிலம் மற்றும் கணிதத்தை படிக்க இருக்கிறார்.

இவரது சீனியர்கள் பலரும் உருது மற்றும் யுனானி கற்று வருகின்றனர். ஆனால் தான் வித்தியாசமாக சமஸ்கிருதம் படிக்க போவதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரபி மொழியை பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது போல தான் சமஸ்கிருதமும். அடுத்து சமஸ்கிருதம் படிப்பேன். சிபிஎஸ்இயின் அறிவிப்பு எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார் சிராஜ்.

ஜெய்சுமுதீன் என்பவர் கூறுகையில், அரசின் முடிவால் தற்போது எங்களால் டாக்டர் மற்றும் என்ஜீனியர்களாக முடியும். பிபிஓக்களிலும் வேலை பார்க்க முடியும் என்றார்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், தேவைப்பட்டால் மதரசா மாணவர்களுக்கு பாடங்களை அடிப்படையிலிருந்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.