Sunday, September 19, 2010

சென்னையில் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு சென்னை : சென்னையில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் - துபாய் ) அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

சென்னையில் ஈமான் அமைப்பின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு


http://mudukulathur.com/?p=2167

For more photos :

http://www.facebook.com/album.php?aid=93055&id=1207444085&l=5e77fabb25

சென்னை : சென்னையில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் - துபாய் ) அமைப்பின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈமான் கல்வி உதவித் தொகை மூலம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு மற்றும் மாணவர் கலந்தாய்வு நிகழ்ச்சி சென்னை எக்மோர் ஹோட்டல் மரினா டவர், கம்பர்ட் இன்னில் 18.09.2010 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். மாணவி ஷாபிரா பர்வின் இறைவசனங்களை ஓதினார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்கள் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பின் மூலம் இத்தகைய கல்வி உதவித்தொகையானது அமீரகத்தில் பணி செய்து கொண்டே ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியினால் கல்வி உதவி நிதி திரட்டப்படுகிறது. இதன் மூலம் இத்தகைய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக துஆச் செய்திட கேட்டுக் கொண்டார்.
ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ.முஹம்மது தாஹா அவர்கள் வரவேற்புரை மற்றும் ஈமான் அமைப்பு குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு இத்தகைய கல்வி உதவி நிதி வழங்குவதற்கு பின்புலமாக இருக்கக்கூடிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ஈமான் அமைப்பின் கல்விக் குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்ட ஈமான் அமைப்பின் அனைத்து நிர்வாகிகளின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
ஈமான் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் கீழக்கரை அல்ஹாஜ் எம்.கே.எஸ். அன்வர் முஹைதீன் மற்றும் காயல் இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்த மாணாக்கர்களை கலந்தாய்வு செய்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரான வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் கல்வி விழிப்புணர்வு குறித்தும், ஈமான் கல்வி உதவித்தொகை மூலம் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் வசதியற்ற மாணவர்களை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில ஆலிம் அணி அமைப்பாளர் மவ்லவி எச். ஹாமித் பக்ரீ மன்பஈ அவர்கள் தனது துபாய் பயணத்தின் போது ஈமான் அமைப்பின் சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும், ஈமான் அமைப்பின் பணிகள் குறித்தும் பாராட்டினார்.
ஈமான் அமைப்பின் கல்வி உதவி மூலம் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை ஈமான் நிர்வாகிகள் வழங்கினர்.
சென்னை பீஸ் அமைப்பின் சலாஹுத்தீன், லால்பேட்டை இமாம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஈமான் அமைப்பின் கல்விச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா நிகழ்வினை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹம்மது முஸ்லிம், ஆடிட்டர் ஜாஹிர் உசேன், இஸ்மாயில் ஹாஜியார், பைசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
120 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஈமான் அமைப்பில் கல்விச்சேவையினைப் பாராட்டினர்.

Wednesday, June 23, 2010

அழகிய முன்மாதிரியாகத் திகழும் உஸ்வத்துன் ஹஸனா

அழகிய முன்மாதிரியாகத் திகழும் உஸ்வத்துன் ஹஸனா

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 50,000 –க்கும் அதிகமானோர் வசிக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் செயல்படும் முஸ்லிம் கல்விச்சங்கம் முஸ்லிம் மகளிர் முன்னேற்றத்துக்கென சிறப்பான தொரு கல்வி சேவையைச் செய்து வருகிறது.

பெண்கள் அனைவரும் கல்வி ஒளிபெற்று அறியாமை இருளகற்றி அவனியில் உயர்வு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பள்ளபட்டி வாழ் பாரி வள்ளல்கள், கல்வி சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து 1974-ம் ஆண்டில் உஸ்வத்துன் ஹஸனா நடுநிலைப் பள்ளியினை மதுரை ஹாஜியா நல்லாசிரியர் கே. கமருன்னிஸாவை முதல்வராகக் கொண்டு துவக்கினர்.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதற்கிணங்க எண்ணத்தால் உயர்ந்து நிற்கும் பள்ளபட்டி முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ்

உஸ்வத்துன் ஹஸனா மழலையர்பள்ளி (1975 – 76)
உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிர் ( 1976 – 77)
மேல்நிலைப்பள்ளி
உஸ்வத்துன் ஹஸனா தொடக்கப்பள்ளி (1973)
உஸ்வத்துன் ஹஸனா உண்டுறை விடுதி (1978)
உஸ்வத்துன் ஹஸனா மேல்நிலைப்பள்ளி (ஆங்கில வழி (1985)
உஸ்வத்துன் ஹஸனா ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் நலன்
காப்பகம் (1987)
உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அப்ஸலுல் உலமா
அரபிக் கல்லூரி (1990 – 91)
ஜாமியா உஸ்வத்துன் ஹஸனா ஆண்கள் அரபிக்கல்லூரி (1991 – 92)
ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அரபிக் கல்லூரியில் 115 மாணவியர், மேல்நிலைப்பள்ளியில் 1646, தொடக்கப்பள்ளியில் 694, மழலையர் பள்ளியில் 305 என மொத்தம் 2750 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் உஸ்வத்துன் ஹஸனா ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் நலன் காப்பகம் மூலம் கல்வி உதவி பெறுவோர் மட்டுமே 1180 பேர், மாணவியரின் நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடைகள், சத்துணவு என ஆண்டுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவிடப்படுகிறது.

அரசு அங்கீகாரப் பணியிடத்தில் 50 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் பள்ளபட்டியைச் சேர்ந்த மகளிருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மழலையர் பள்ளி ஆகியவற்றில் 54 பேர் நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக் கல்வியை முடித்த மகளிர் பொருளாதார முன்னேற்றம் அடைய, அவர்களுக்கென ஒரு ‘சுய தொழில்’ தேவை எனச் சிந்தித்த இச்சங்கம், மகளிருக்கு தையற் பயிற்சி, எம்பிராய்டரி, கூடை பின்னுதல், அலங்கார கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற தொழிற் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

இதுவரை 412 தையல் இயந்திரங்கள், 23 எம்பிராய்டரி தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்கியுள்ளது. 50 மாணவிகளுக்கு கவுன், பர்மிடாஸ் தயார் செய்யும் வேலை வாய்ப்பும் கொடுத்து ஒரு நாளைக்கு ரூ.100 வரை ஊதியம் பெறுகின்றனர்.

மாணவிகளின் மேற்படிப்பு, மருத்துவ சிகிச்சை இவற்றிற்கு பணமில்லாமல் அவதிப்படுவோருக்கு உதவ ‘வட்டியில்லா நகைக்கடன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இச்சங்கம். அதற்காக ‘அல் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் ஃபண்ட் டிரஸ்ட்’ என்னும் வங்கி அமைப்பைத் தொடங்கி, வட்டியில்லாமல் நகையின் மதிப்பில் 60 சதத்துக்கு கடன் வழங்கப்படுகிறது.

பள்ளப்பட்டியைச் சார்ந்த 26 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்த பெண்கள் 30 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருமண உதவியாக வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் கல்வி, பொருளாதார முன்னேற்றமடைவதுடன் ‘தனித்திறன்’ பலவற்றில் முன் மாதிரிகளாகத் திகழ்கின்றனர்.

10, +2 அரசு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
10, +2 அரசு பொதுத் தேர்வுகளில் அரபி, தாவரவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பும், அலங்காரமும் என்று பல பாடங்களில் தொடர்ந்து மாநிலத் தரம் (State Rank)

பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் மாநில அளவில் பரிசுகள். குறிப்பாக ‘அண்ணா நூற்றாண்டு விழா’ கவிதை ஒப்புவித்தல் போட்டி மற்றும் ‘இதயத்தைத் தந்து விடு அண்ணா’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய கவிதை ஒப்புவித்தல் போட்டி இவைகளில் மாநிலப் பரிசுகள்.

துவக்கப்பள்ளி ‘மாவட்டத்தில் சிறந்த பள்ளி’ - என்ற விருது.
சென்ட்ரல் வஃக்பு போர்டு அளித்த ‘The Best Muslim School of Tamilnadu’ என்ற பாராட்டு.
துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியைகளுக்கு ‘டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது’கள்.

கல்வி அதிகாரிகளின் பாராட்டுக்கள்

இவை சில உதாரணங்கள்

ஏழை மாணவிகள் மருத்துவம், பொறியியல், ஆசிரியப் பயிற்சி முதலிய உயர்கல்வி கற்க, பொருளாதார உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முஸ்லிம் பெண் மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும், ஆசிரியைகளும் உருவாகி இஸ்லாமிய சமுதாயத்தின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.

பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெண்கள் கல்லூரி இல்லாததால் பள்ளப்பட்டி மக்களின் ‘கனவுத் திட்டமான’ மகளிர் கல்லூரியினை விரைவில் துவக்கிட கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க இஸ்லாமிய மார்க்கப் பேணுதல் அமைப்பில் கல்லூரி செயல்படும். ‘Islamic Cultural Studies’ என்ற பாடப் பிரிவுகளும் இடம் பெறும்.

இஸ்லாமிய பெண்களைக் கல்வி, ஒழுக்கம், பொருளாதாரம், நாட்டுப்பற்று, ஆன்மீகம், அறிவியல் ஞானம் என்று பல வழிகளிலும் மேம்படுத்தும் வகையில் ‘உஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி’ அமையும். இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக அனைவரின் துஆக்களையும் நாடுகிறோம்.

நன்றி : மணிச்சுடர் ( 08/09 ஜுன் 2010 )

Monday, June 21, 2010

என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை

சென்னை, ஜுன்.18-
என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.
இதுகுறித்து சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கல்வி உதவித்தொகை
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் முதலிய மதத்தை சேர்ந்த பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.
குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்திருக்க வேண்டும்.
ரூ.20 ஆயிரம்
படிப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மற்றும் விடுதி கட்டணம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விடுதியில் இல்லாத மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.500 கொடுக்கப்படும். கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்கள் ஜுலை 26-ந்தேதிக்குள்ளும், புதிய மாணவர்கள் ஆகஸ்டு 10-ந்தேதிக்குள்ளும் அவர்கள் சேர்ந்துள்ள கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து விவரத்துடன் சிறுபான்மையினர் நல ஆணையர், 807, 5-வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு ஜுலை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதே முகவரிக்கு புதிய விண்ணப்பங்களை கல்விநிலையங்கள் 13-8-2010 தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
இதுகுறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tuesday, June 1, 2010

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு

S.S.L.C. , +2 , 10th மெட்ரிகுலேஷன் மாணவிகள் கவனத்திற்கு

அல்ஹாஜ். Dr. A. ஜமீர் பாஷா – ஷகீலா தம்பதிகள்,
அல்ஹாஜ். Dr M.S. அஷ்ரஃப் – ஹாஜியா ஜீனத் தம்பதிகள்,
அல்ஹாஜ். H.Q. நஜ்முதீன் – ஹாஜியா சையது பாத்திமா தம்பதிகள்,
அல்ஹாஜ். A. பஷீர் அஹ்மத் – ஹாஜியா அப்ரோஜாகனி தம்பதிகள்,

வழமை போல் இவ்வருடமும் S.S.L.C.,+2,10th மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கு ‘நர்கிஸ்’ சார்பில் பரிசுகளை வழங்கி பாராட்ட இருக்கிறார்கள்.

+2 தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், ஜூன் 1-ம் தேதிக்குள், S.S.L.C. – மெட்ரிகுலேஷன் மாணவிகள் ஜூன் 15-ம் தேதிக்குள் தங்களது மதிப்பெண் பட்டியல் ஜிராக்ஸும் கைப்பட எழுதிய கடிதம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், 1 புகைப்படம், ரிப்ளை கவர் இணைத்து நர்கிஸ் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டும்.

S.S.L.C., +2, மெட்ரிகுலேஷன் மாணவிகள் பரிசு என்று கவரில் குறிப்பிடவும். நர்கிஸ் சந்தாதாரர் என்றால் சந்தா எண் தரவும். சந்தா தாராக இல்லாவிட்டாலும் கட்டாயம் தகவல் தரவும்.

M. அனீஸ் ஃபாத்திமா ( ஆசிரியை ‘நர்கிஸ்’)

54, மரியம் நகர், மல்லிகைபுரம், திருச்சி – 1.

Thursday, May 20, 2010

Research Institutes In India

Research Institutes In India

Name of the College: Botanical Survey of India
Address of the College: Southern Circle, T.N.A.U Campas, Lawley Road, Coimbatore - 641 003 Tamil Nadu
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes - Ph.D. (Botany - Plant Biology & Bio-Technology)



Name of the College: Central Institute for Cotton Research
Address of the College: Maruthamalai Road, Lawly Road (PO) Coimbatore - 641 003 Tamil Nadu
Phone(s): 0422-2430045/2439839 Fax(s):0422-2454021
EMail: cicrbe@rediffmail.com Website: www.cicr.nic.in
Year of Establishment: 1967
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Botany - Plant Biology & Bio-Technology)
Ph.D. (Chemistry)
Ph.D. (Zoology - Animal Science & Bio-Technology)



Name of the College: N.T.C. Staff College
Address of the College: Coimbatore - 641 004 Tamil Nadu
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Finance and Accounts)
Ph.D. (General Management and Organisational Bahaviour)
Ph.D. (Industrial / Social Psychology)


Name of the College: Pasteur Institute of India
Address of the College: Coonoor - 643 103 , Nilgiri Dist , Tamil Nadu
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes - Ph.D. (Microbiology)


Name of the College: Salim Ali Centre for Ornithology and Natural History
Address of the College: Anaikatty P.O. Coimbatore - 641 108 Tamil Nadu
Phone(s): 0422-2657101-105 Fax(s): 0422 - 2657088
EMail: salimali@vsnl.com Website: www.sacon.org
Year of Establishment: 1990
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Botany - Plant Biology & Bio-Technology)
Ph.D. (Environmental Science)
Ph.D. (Zoology - Animal Science & Bio-Technology)


Name of the College: Solid State Physics Laboratory (SSPL).
Address of the College: Defence R & D Organization , Lucknow Road, Timarpur, Delhi - 110 054
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Physics)

Name of the College: Southern India Textile Research Association ( S.I.T.R.A)
Address of the College: Coimbatore Aerodrome (PO) Coimbatore - 641 014 Tamil Nadu
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Industrial / Social Psychology)
Ph.D. (Textile Chemistry)
Ph.D. (Textile Physics)
Ph.D. (Textile Technology)


Name of the College: Sugarcane Breeding Institute
Address of the College: Indian Council of Agricultural Research , Coimbatore - 641 007, Tamil Nadu
Phone(s): 0422-2472986, 2476261 Fax(s): 0422-2472923
EMail: sugaris@vsnl.com Website: www.sugarcane-breeding.tn.nic.in
Year of Establishment: 1912
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Botany - Plant Biology & Bio-Technology)
Ph.D. (Chemistry)
Ph.D. (Entomology)
Ph.D. (Statistics)
Ph.D. (Zoology - Animal Science & Bio-Technology)


Name of the College: T.Stanes and Company Limited
Address of the College: 8/23-24, Race Course Road, P.O Box No.2709 , Coimbatore - 641 018 , Tamil Nadu
Phone(s): 0422-2221514, 2223515-518 Fax(s): 0422-2220432, 2220857
EMail: tstanes@vsnl.com Website: www.tstanes.com
Year of Establishment: 1910
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Plant Science)
Research Programmes

Name of the College: United Planter's Association of Southern India, (UPASI Tea Research Inst)
Address of the College: Nirar Dam BPO , Vallparai - 642 127 , Pollachi Taluk , Coimbatore Dist, Tamil Nadu
Phone(s): 04253-235301, 235303 Fax(s): 04253-235302
EMail: upasitri@satyammail.com
Website: www.upasitearesearch.org
Year of Establishment: 1926
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes

Ph.D. (Chemical Technology (Tea))
Ph.D. (Entomology)
Ph.D. (Plant Chemistry)
Ph.D. (Plant Genetics)
Ph.D. (Plant Pathology)
Ph.D. (Plant Physiology)


Name of the College: Centre for Research in Social Sciences, Technology & Culture
Address of the College: Kalaikathir Buildings,963,Avanashi Road,Coimbatore - 641 037,Tamil Nadu
Phone(s): 0422-2215454-55, 2214011 Fax(s): 0422-2210187, 2591865
EMail: grdcs@grd.org Website: www.grd.org
Year of Establishment: 1985
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Sociology)


Name of the College: Dalmia Center for Research & Development
Address of the College: B-133,134, Paripoorana Estates, Sundakkamuthur Post, Coimbatore - 641 010, Tamil Nadu
Phone(s): 0422-2605216, 2607688 Fax(s): 0422-2607688
EMail: dalmiabiotechnology@vsnl.com Website: www.dalmiaresearch.org
Year of Establishment: 1990
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Plant Biotechnology)


Name of the College: Defence Institute of Physiology and Allied Sciences
Address of the College: Delhi Cantt , New Delhi - 110 010
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Physiology and Allied Sciences)


Name of the College: Defence Research & Development Establishment
Address of the College: Government of India, Ministry of Defence, Janshi Road, Gwalior - 474 002
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Biological Sciences)
Ph.D. (Chemical Sciences)


Name of the College: Indian Institute of Spices Research.
Address of the College: P.O. Box 1701, Marikunnu (PO), Calicut - 673 012 , Kerala
Phone(s): 0495-2731410, 2731753 Fax(s): 0495-2730294
EMail: mail@iisr.org Website: www.iisr.org
Year of Establishment: 1976
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Botany - Plant Biology & Bio-Technology)


Name of the College: Institute for Forest Genetic and Tree Breeding
Address of the College: Coimbatore - 641 002 , Tamil Nadu
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Entomology)
Ph.D. (Systematic Botany)


Name of the College: Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS)
Address of the College: DRDO, Brig. SK Mazumdar Road, Delhi - 110 054
Phone(s): 011-23942418, 23914377 Fax(s): 011-23919509
EMail: director@inmas.org Website: www.drdo.org
Year of Establishment: 1961
Type of Institution: Research Institution
Courses Offered: Doctorate Programmes
Ph.D. (Chemistry)
Ph.D. (Environmental Science)
Ph.D. (Physics)
Ph.D. (Psychology)
Ph.D. (Zoology - Animal Science & Bio-Technology)

Thursday, April 1, 2010

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையம்

துபாய் : துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் திருக்குர்ஆன் மனனப் பயிற்சி மையத்தை பர்மாவைச் சேர்ந்த சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் ஐந்து வயது மாணவர்கள் முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.

சில பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

மேலும் விபரங்களுக்கு :

தொலைபேசி : 04 – 2645 777 / 050 797 5677

மின்னஞ்சல் : burmacentre.dubai@hotmail.com
Burmacentre.dubai@gmail.com

ஹஜ் புனித பயண விண்ணப்பம் : நாளை முதல் வினியோகம்

ஹஜ் புனித பயண விண்ணப்பம் : நாளை முதல் வினியோகம்
ஏப்ரல் 01,2010,00:00 IST

சென்னை : ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், நாளை முதல் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயணத்திற்கான தற்காலிக பதிவு விண்ணப்பங்களை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக ஹஜ் குழு நிர்வாக அலுவலரிடம் சென்று, ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.hajcommittee.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனை கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு நடப்பு கணக்கில்(எண்:30683623887) செலுத்தி, அதற்கான வங்கி ரசீது நகலுடன் தமிழக ஹஜ் குழுவிடம், ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச பாஸ்போர்ட் இருப்பின், அதன் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்திருந்தால், இருப்பிட முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும். பரிசீலனை கட்டணமாக அளிக்கும் பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 7, 2010

Civilserviceindia.com

Civilserviceindia.com invites IAS aspirants to join a very unique library for their civil service preparation. This is the first time in Chennai, a specific library is set up for those IAS aspirant who want to make notes in a quite library which is not easily available and do other preparations. With many books related to civil service guidance, we provide space to sit and make notes and further reading. There are certain books which we shall make available from publishers and distributors for the benefit of aspirants. We display all subject books which are also for sale. We guide IAS aspirant to achieve their goal easily and successfully.

Join civilserviceindia.com� library for greater exposure and preparation.

Free Counseling for all registrants.

� Registration fees: Rs. 500 for 1 year
� Book discount for members only.
� Free intro guidance for members

Contact for further details:

Tabrez Imam
Co-ordinator
+91-9600032187

Library:
www.civilserviceindia.com
Concern Infotech Pvt. Ltd.
1/6,Flowers Road, 4th Lane, 1st floor,
Purasawalkam,
Chennai - 600 084.
Phone : 044-2640 0136

Sunday, January 31, 2010

வெற்றி முரசு கொட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன்

வெற்றி முரசு கொட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன்
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)


http://www.mudukulathur.com/religiondetails.asp?id=232

என் இனிய முஸ்லிம் பட்டதாரிகளே! உங்களால் நாட்டின் உயர் பதவியினை எட்டமுடியாதா? உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதினை புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள் தான் உள்ளனர். அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள் தான் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட முஸ்;லிம் கல்லூரிகள(;கலை மற்;றும் இன்ஜினீரயங்) தமிழ் நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை? நம்முடைய இளைஞர்களிடம் திறமையில்லையா? இருக்கிறது. ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாததால் திக்குத் தெரியாக் காட்டில் விடப்பட்டவர்கள் போல குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலோ அல்லது வளைகுடா நாடுகளிலோ வேலைக்குச் செல்கின்றனர். நமது முஸ்லிம் பெரியோர்கள், செல்வந்தர்கள் முஸ்லிம் இளைஞர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று கல்லூரிகள் ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் வேலை வாய்ப்பிற்கு என்ன வழிகள் என ஆராய தவறி விடுகின்றனர். வேலை தேடிக்கொள்வது அவரவர் கடமை என எண்ணுகின்றனர். ஆகவே தான் நாட்டில் பட்டம் பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் 15 சதவீதம் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள் என்று என.எஸ்.எஸ்.ஓ ஆய்வு சொல்கிறது.
பாரத பிரதமர் நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சொல்கிறார். அந்த சச்சார் கமிட்டியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்தினை விட பின்தங்கியுள்ளார்கள் என்று சொல்லியுள்ளது. தலித் பட்டதாரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் இன்று ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் பிடித்து சமூதாயத்தில் தங்கெளுக்கென்று மதிப்பான இடத்தினை பிடித்துள்ளார்கள். சமீபத்தில் நீதிபதி ரங்கனாத் மிஸரா அறிக்கையில் கூட முஸ்;லிம்களுக்கு 10 சதவீதம் வேலை வாய்ப்பினை கொடுக்க சிபாரிசு செய்துள்ளது. ஆகவே படித்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களை நாட்டின் உயர்பதவிக்கு தயார் செய்யவேண்டும். எப்போதுமே நமது குறிக்கோள் உயர் உடையதாக இருக்க வேண்டும். சென்ற ஜனவரி 26 ந்தேதி உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி ஐ.பி.எஸ்ஸில் நிறைய இடங்கள் காலியாக இருப்பதால் வருடத்திற்கு 70 பதவிகள் வீதம் 10 வருடத்திற்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தெடுக்கப் போவதாக அறிவித்திருப்பது நமக்கு ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டும்.

நாங்களெல்லாம் கல்லூரியில் படித்தபோது அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் கோச்சிங் மையங்களில்லை. வயது வரம்பும் 24 ஆக இருந்தது. நான் சென்னை புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபோது ராயப்பேட்டை ஸ்வாக்கத் ஹோட்டல் அருகில் இருந்த ஐயர் ஐ.ஏ.எஸ் அகாடாமியில் சென்று விசாரித்தபோது எம்.ஏ படித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால் எம்.ஏ படித்து விட்டு சென்ற போது வயது உச்சவரம்பை தாண்டி விட்டது. ஆகவே தமிழ்நாடு அரசு நடத்திய தேர்வில் டி.எஸ்.பியாகி பின்பு ஐ.பி.எஸ் அடைய முடிந்தது. ஆனால் இன்று வயது உச்ச வரம்பு ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயதைக் கடந்து 30 வயதிற்கு மேல் தாண்டாது இருந்தால் போதும். வெறும் பட்டம் பெற்றிருந்தாலே ஐ.ஏ.எஸ்ஸ_க்கு உங்களுக்கு தகுதியுண்டு. ஆனால் பரீட்சைக்கான பாடங்கள் முதுகலை பட்டப்படிப்பளவிற்கு இருக்கும். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களை நீங்கள் பயிற்சி ழூலம் தயார் படுத்திக் கொள்ளலாம். அந்த பயிற்சியினை அரசே அண்னாநகரிலும், மனிதநேய மையம் சைதாப்பேட்டையிலும், தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் சென்னை வெப்பேரியிலும், சென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ்ஏ இன்ஜினீரியங் கல்லூரியிலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் நடத்தப்படுகிறது. இன்னும் நமது இஸ்லாமிய அமைப்புகள் அதிகமாக பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும.; அப்படி அமைத்தால் டெல்லி சென்று தான் பயிற்சி எடுக்க வேண்டுமென்ற நிலை இருக்காது.
ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் தேர்வு ழூன்று விதமாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும். அவை:
1) முதல்நிலைத் தேர்வு: அதற்கான அழைப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் அனைத்து லீடிங் ஆங்கில-தமிழ் பத்திரிக்கைகளில் வெளியாகும.;. பரீட்சை இரண்டு தாள்கள் இருக்கும்.
முதல் தாள்: பொதுப் பாடங்கள் சம்பந்தப் பட்டது. அதற்கான மதிப்பெண் 150 ஆகும்.
இரண்டாவது தாள் விருப்பப்பாடங்கள் அடங்கும். அதற்கு 300 மதிப்பெண் தரப்படும். பெரும்பாலும் விருப்பப்பாடங்கள் எடுக்கும் போது அது பிரதான பரீட்சைக்கு உதவும் வகையில் எடுக்க வேண்டும். விருப்பப்பாட பட்டியல்கள் கீழ் வருமாறு:
விவசாயம்
அனிமல் ஹஸ்பன்ட்ரி மட்டும் வெட்னெரரி சயின்ஸ்
தாவரவியல்
வேதியல்
சிவில் இன்ஜினீரியங்
காமர்ஸ்
பொருளாதாரம்
எலக்ட்ரிகல் இன்ஜினீரியங்
புவியியல்
ஜியாலஜி
இந்திய வரலாறு
சட்டம்
கணிதம்
மெக்கானிகல் இன்ஜினீரியங்
மருத்துவம்
தத்துவம்
பௌதீகம்
பொது நிர்வாகம்
சோசியாலஜி
புள்ளிவிரபங்கள்
வுpலங்கியல்
மேற்கூறியவைகளில் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்தால் பிரதான பரீட்சைக்கு உதவும்.
ஆரம்ப கட்ட பரீட்சையில் தேர்வு பெற்ற மாணவர்கள் பிரதான பரீட்சைக்கு அழைக்கப் படுவார்கள். அந்தப் பரீட்சைகள் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் நடக்கும். அதில் ஒன்பது தாள்கள் இருபது நாட்களுக்குள் இருக்கும். அவை பின் வருமாறு:
(கட்டாயம); முதல்தாள்: அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகள் ஒன்றில் ஒரு மொழி தேர்வு செய்ய வேண்டும். அதற்கு 300 மதிப்பெண்கள்
(கட்டாயம்) இரண்டாவது தாள்: ஆங்கிலம். அதன் மதிப்பெண் 300
மூன்றாவது தாள்: கட்டுரை. அதன் மதிப்பெண் 200
நானகாவது தாள் மற்றும் ஐந்தாவது தாள்: பொதுப்பாடங்கள். அவைகளுக்கு மதிப்பெண் ஒவ்பொன்றிற்கும் 300
ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது தாள்கள்: விருப்பப்பாடங்கள் இரண்டில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு தாள்கள் இருக்கும். அவைகளுக்கு தலா 300 மதிப்பெண்கள்.
பிரதான பரீட்சையின் நோக்கமே மாணவர்களின் கல்வித் தகுதியை அறிவதிற்காக நடத்தப் படுவது மட்டுமல்ல. மாறாக அவர் பரீட்சையில் தான் படித்த பாடங்களை எவ்வாறு கோர்வையாக எழுதுகிறார் என்பதினையும் ஆய்வு செய்யப்படும். கட்டாயப் பாடத்தில் 35 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கட்டாயப் பாடங்களில் கட்டுரை, மொழி பெயர்ப்பு, சுருக்கி எழுதல், வாக்கியம் அமைத்தல், மொழி மரபுச் சொற்தொடர்கள், பழமொழிகள், பொருள் அர்த்தங்கள் ஆகியவை குறிக்கும். பரீட்சைக்கு ஆயத்தமாவதிற்கு எழுதிப் பழகுவது அவசியம்.
அடுத்த படியாக கட்டுரைத் தேர்வில் சரியான தலைப்பினை எடுத்து உண்மையான-தெளிவான கருத்துக்களுடன் எழுத வேண்டும்.. முதல் 5 நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இரண்டு தலைப்பினை தேர்ந்தெடுத்து அதில் நன்றாக தெரிந்த ஒரு தலைப்பினை நிலை நிறுத்தி எழுதத் துவங்கவேண்டும். ஆரம்பம்-கரு-முடிவுரை என்று பிரித்துக் கொள்ளவது நல்;லது. எழுதிய கட்டுரையினை திரும்பப் படிக்க நேரத்தினை வைத்துக் கொள்ள வேண்டும்.
பொதுப் பாடங்கள் இரண்டில் பாடம் ஒன்றில் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு, நடப்பு சம்பவங்கள், சமூக செய்திகள் சம்பந்தப்பட்டது. இரண்டாவது பாடம் இந்தியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்டது, இந்திய பொருளாதாரம், சர்வதேச சம்பந்தமான செயல்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிழ் நுட்ப வளர்ச்சி, தொலைத் தொடர்பு, புள்ளி விபர ஆய்வு ஆகியவைகள் அடங்கும்.

பிரதான பரீட்சையில் தேர்வு பெற்றவர்கள் நேர்முக தேர்விற்கு டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.

பரீட்சைக்கு ஆயத்தமாகும் முன்பு அது சம்பந்தமான புத்தகங்கள், பீரியாடிகல்ஸ் ஆகியவைகளை தேடி சேகரிக்க வேண்டும். அல்லது அவை கிடைக்கும் நூலகங்கள்-பழைய புத்தகக் கடைகள் ஆகியவைகளை அணுகி புத்தகங்களை சேகரித்து குறிப்பு எடுக்க வேண்டும.;. பொது அறிவிற்கான புத்தகங்களான காம்படிசன் மாஸ்டர், காம்படிசன் ரிவ்யூ, காம்படிசன் சக்சஸ், கேரியர் டைஜஸ்ட் வாராந்திர, மாத ஆங்கில இதழ்களை வாங்கி படிக்க வேண்டும். ஆங்கில தினப் பத்திரிக்கையான ஹிந்து படித்தால் பொது அறிவிற்கான தகவல்கள், கட்டுரைக்கான தகவல்கள் கிடைக்கும். ஆங்கில செய்திகளை ரேடியோ-டி.வியில் கேட்க வேண்டும.; .மலயாள மனோரமா ஆண்டு புத்தகம் பொதுக் தகவல்களை வழங்குகிறது. சென்னையில் கன்னிமாரா-அண்ணாசாலையிலுள்ள பாவாணர் நூலகம்-மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் ஆகியவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நேர் முகத் தேர்விற்கு செல்லும் போது தூய ஆடைகளை அணிய வேண்டும். ஒரு முறை வி.ஜி.பன்னீர்தாஸ் தான் சாதாரண கூலித் தொழிலாளியாக சென்னை வந்து இன்று பெரிய கோடீஸ்வரராகி பிரபலமானதிற்குக் காரணம் அவர் எப்போதும் மற்றவர்கள் கவரக்கூடிய ஆடை, அதாவது கோட்-சூட் அணிவதை விடுவதில்லையாம். ஆகவே தான் பலங்காலத்தில் ஆடைபாதி ஆள்பாதி என்பார்கள். தேர்வுக்குழுவினர் கேட்கும் கேள்விக்கு நேரான தெரிந்த பதிலைச அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டும். தெரியவில்லையென்றால் அதனை ஒப்புக் கொள்ள வேண்டும். பதட்டப்படாமல் நீங்கள் படித்தவர்கள்-மிக உயர்ந்த வேலைக்குப் தேர்வு செய்யப்பட போகிறீர்கள் என்று எண்ண வேண்டும். எந்த சமயத்திலும் உங்கள் பணத்திலோ படிப்பிலோ சமூக அந்தஸ்திலோ தாழ்வு மனப்பான்மையினை உங்களை ஆட்கொள்ளக்கூடாது. தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். ஆகவே எந்த நேரத்திலும் தைரியத்தினை கை விடக்கூடாது.
உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், அமெரிக்கா, இந்தியாவில் அவுட் சோர்ஸிங்கினை கட்டுப்பாடு விதித்து இந்திய இன்ஜினீரியங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இழக்கும் பயம் இருப்பதாலும், நமது முஸ்லிம்கள் பல் வேறு முஸ்லிம்கள் நடத்தும் இன்ஜினீரியங் கல்லூரிகள், மற்றும் பல்வேறு இன்ஜினீரியங் கல்லூரிகளில் முஸ்லிம்கள் படித்து வருவதாலம் அவர்கள் மிக குறைந்த சம்பளத்தில் இந்தியக் கம்பெனிகளில், அல்லது வளைகுடா நாடுகளில் வேலை தேடுவதினை விட, சம்பளம் அதிகமுள்ள, சமூகத்தில் மரியாதையுள்ள, வேலை உத்திரவாதமுள்ள, சலுகைகள், ஓய்வூதியம் ஆகிய உத்திரவாதத்துடன் கூடிய உயர் பதவியான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பரீட்சை எழுதி அந்தப் பதவிகளை அடையும் குறிக்கோளே மேல்.
தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மூன்றரை சதவீதம் ஒதுக்கீடு அளித்துள்ளார்கள். மத்தியில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வில்;; தேர்வு பெறாதவர்கள் மனந்தளராது அதற்கு இணையாக தமிழகத்தில் டிப்டி கலெக்டர்-டி.எஸ.பி நேரடி தேர்விற்கான தமிழ்நாடு தேர்வாணையும் நடத்தும் குரூப் ஒன்று பரீட்சை எழுதி தேர்வு பெறலாம்.
மனிதன் ஒரு லட்சியத்தினை அடைய வேண்டுமென்றால் முதலில் அது சாத்தியமாகும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த லட்சியத்திற்கு எப்படி பிறந்த குழந்தைக்கு அது வளர சத்துணவு கொடுக்கிறோமோ அதேபோன்று கடின உழைப்பு மூலம் உங்கள் லட்சியத்தினை அடைய முயல வேண்டும். ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்தால் மனந்தளரக்கூடாது. நான் மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் வெற்றி மூன்றாவுது முறையாகத்தான் தேர்வு பெற்றேன். மூன்றாவது படிக்கட்டில் ஏறிய குழந்தை தோல்வியடைந்தலும், இரண்டாவது படிக்கட்டில் விழுவதில்லை. நான்காவது படிக்கட்டில் ஏற முடியாது அவ்வளவு தானே. மீண்டும் மூன்றாவது படிக்கட்டிலிருந்து குழந்தை நான்காவது படிக்கட்டுக்குப் போக கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்-பயிற்சியும் வேண்டும். அதேபோன்று தான் பரீட்சையில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் கஜினி முகம்மது போரில் வெற்றிபெற எத்தனை தடவை முயற்சி எடுத்தான் என்று எண்ணத்தில் கொண்டு அத்தனை தடவை முயற்சி எடுத்தாலும் தான் கொண்ட குறிக்கோளை அடைய பாடுபட வேண்டும். ஆகவே தான் வெற்றி முரசான விடா முயற்சிகளை எடுங்கள,; வெற்றிவாகை சூடி சமூதாயத்தில் வீறு நடை போடுங்கள் என்ற கோசங்கள் எழுப்பினேன் அது சரிதானே என் இனிய இஸ்லாமிய பட்டதாரிகளே!

Saturday, January 23, 2010

2010க்கான ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்: தமிழக அரசு வேண்டுகோள்

2010க்கான ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் உடனடியாக சர்வதேச பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஹஜ் விசா பெறுவதற்கு பயணிகள் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம் என சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளதாக மும்பை, இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஹஜ் 2010க்கு புனித பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் விண்ணப்பிக்கும்போது பன்னாட்டு பாஸ்போர்ட்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

ஹஜ் 2010க்கு புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்களிடம் பன்னாட்டு பாஸ்போர்ட் தற்போது இல்லாதிருப்பின் அதற்காக இப்போதே விண்ணப்பிக்க தயாராக வேண்டும்.

ஹஜ் 2010க்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம். இந்தக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி சர்வதேச பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 20, 2010

நிகர்நிலை பல்கலை............

நிகர்நிலை பல்கலை.....

இந்தியா முழுவதும் உள்ள 126 நிகர்நிலை பல்கல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து
44 பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக
அந்தஸ்தை திரும்பபப் பெற்றுள்ளதாக உச்சநீதி மன்றத்தில் அறிவித்துள்ளது.

அவையாவன:

Christ College, Bangalore

Vignan's Foundation for Science, Technology and Research, Guntur, Andhra Pradesh

Lingaya's University, Faridabad

St Peter's Institute of Higher Education and Research, Chennai

Noorul Islam Centre for Higher Education, Kanyakumari

Jaypee Institute of Information Technology, Noida

Shobhit Institute of Engineering and Technology, Meerut

Sumandeep Vidyapeet, Vadodara, Gujarat

Sri Devraj Urs Academy of Higher Education and Reserch, Kolar, Karnataka

Yenepoya University, Mangalore

BLDE University, Bijapur, Karnataka

Krishna Institute of Medical Sciences, Satara, Maharashtra

D Y Patil Medical College, Kolhapur, Maharashtra

Meenakshi Academy of Higher Education and Research, Chennai

Chettinad Academy of Research and Education, Kanchipuram

HIHT University, Dehradun

Santosh University, Ghaziabad

Maharshi Markandeshwar University, Ambala, Haryana

Manav Rachna International University, Faridabad

Sri Siddhartha Academy of Higher Education, Tumkur, Karnataka

Jain University, Bangalore

Tilak Maharashtra Vidyapeeth, Pune

Siksha "O" Anusandha, Bhubaneswar

Janardan Rai Nagar, Udaipur, Rajasthan

Institute of Advanced Studies in Education of Gandhi Vidya Mandir,
Sardarshahr, Rajasthan

Mody Institute of Technology, Sikar, Rajasthan

Dr MGR Educational and Research Institute, Chennai

Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai

Kalasalingam Academy of Research and Education, Virdhunagar, Tamil Nadu

Periryar Maniammai Institute of Science and Technology, Thanjavur

Academy of Maritime Education and Training, Chennai

Vel's Institute of Science, Technology and Advanced Studies, Chennai

Karpagam Academy of Higher Education, Coimbatore

Vel Tech Rangaraja Dr Sagunthal R&D Institute of Science, Chennai

Gurukul Kangri, Haridwar

Grapich Era University, Dehradun

Nehru Gram Bharati Vishwavidyalaya, Allahabad

Sri Balaji Vidyapeeth, Puducherry

Vinayaka Mission's Research Foundation, Salem, Tamil Nadu

Bharath Institute of Higher Education And Research, Chennai

Ponnaiya Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu

Nava Nalanda Mahavira, Nalanda, Bihar

Rajiv Gandhi National Institute of Youth Development, Sriperumbudur, Tamil Nadu

National Museum, Institute of the History of Art Conservation and
Musicology, Janpath, New Delhi

Thursday, January 14, 2010

சிவில் சர்வீசஸ் தேர்வு 2010

சிவில் சர்வீசஸ் தேர்வு 2010



நாட்டின் மிக உயரிய அரசு நிர்வாகப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு,
முதனிலை (பிரிமிலினரி), முதன்மை (மெயின்) மற்றும் நேர்முகத்தேர்வு (இன்டர்வியூ) என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான முதனிலைத் தேர்வு மே 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரி 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதனிலைத்தேர்வில் பொது அறிவு, விருப்பப்பாடம் ஆகிய 2 தாள்கள் இடம்பெறும். பொது அறிவுக்கு 150 மதிப்பெண்களும், விருப்பப்பாடத்திற்கு 300 மதிப்பெண்களும் தரப்படுகிறது. கொள்குறி வினா (அப்ஜக்டிவ்)
வடிவில் இத்தேர்வு அமைகிறது.

முதனிலைத்தேர்வில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப் பெண் உள்ளதை அவசியம் நினைவில் கொள்ளுங்கள். இத்தேர்வில் தகுதி பெற்றால்தான் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய மையங்
களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

பணி இடங்கள்: 965
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2010 அன்று, 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.8.1980க்கு முன்போ 1.8.1989 தேதிக்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது.

வயது வரம்பு சலுகை: ஓ.பி.சி.,பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. உடல் ஊனமுற்றோருக்கு10 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத வரம்பு: இத்தேர்வை ஒருவர் அதிகபட்சமாக நான்கு முறை எழுத முடியும். ஓ.பி.சி.,பிரிவினர் 7 முறை எழுதலாம். உடல் ஊனமுற்ற பொதுப்பிரிவினரும் 7 முறை எழுத முடியும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்காக யு.பி.எஸ்.சி., வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவம் தலைமை தபால் அலுவலகங்களில் வினியோகிக்கப்
படுகிறது. விண்ணப்படிவத்தின் கட்டணம் ரூ.20

இதுதவிர, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் ஆக மட்டுமே செலுத்த வேண்டும். தபால் அலுவலகங்களில் இதைப்பெற்று விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும். பின் கேன்சலிங் செய்து அதே தபால் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.பிரிவினர் விண்ணப்பக் கட்டணம்
செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

போஸ்டல் ஆர்டர், டி.டி., மணி ஆர்டர், செக், பணம் ஆகிய முறையில் கட்டணத்தை செலுத்தக் கூடாது.

Thursday, January 7, 2010

நாயகமே! நபி நாயகமே!

நாயகமே! நபி நாயகமே!



நாயகமே – எங்கள்

நபிகள் நாயகமே!

இறைவேதத்தின்

நிறைவாழ்வே!


காருண்யத்தின் முகவரியே!

ஒளிச்சுடர்களையும்

உயிர்ப்பிக்கும் ஒளிப்பொருளே!


வாழ்வையும் -

வாழ்வின்

அனைத்து நிலைகளையும்

உயிர்ப்பித்தவர்கள் நீங்கள்!


நரக நெருப்பின்

விளிம்பிலிருந்தவர்களையும்

சுவனத்தில் கைகொடுத்துத்

தூக்கியவர்கள் நீங்கள்!


எங்கள் ஆதார வித்தே!

ஈருலகுக்கும் உயிரான சொத்தே!


எங்களுக்கு

உங்கள் ஆதாரம் மட்டும்தான்

ஆதாரம்!

இல்லையென்றால்

இருமைகளும் அல்லவா

கருமைகளாகியிருக்கும்!


அந்தக் கருமைகள் சூழாமல்

அவைகளை அருமைகளாய் ஆக்கி

எங்களைக் காப்பவர் நீங்கள்

ஒளிபூக்கும் ஈமான் உள்ளத்தில்

உயர்வாகப் பூப்பவர் நீங்கள்!


எங்கள்

ஈருலகங்களும்

உங்களால் சிறந்தன

ஏனெனில் நாங்கள்

உங்கள் ‘உம்மத்துக்கள்’

இந்த இறைக்கருணை

அரும்பெரும் பாக்கியமல்லவா!


விழிகளையே

திருடிக்கொள்பவர்களுக்கு மத்தியில்

ஒளிவிளக்காயிருப்பவர் நீங்கள் மட்டும்தான்!


இதயங்களையே

தொலைத்தவர்களுக்கு மத்தியில்

உதயங்களைத் தந்தவர்

நீங்கள் மட்டும்தான்!


இரத்தம் உண்ணும்

ஈரக் குலைகளை

சுத்தப் படுத்தியது

உங்கள் மன்னிப்பு எனும்

‘ஜம்ஜம்’ மட்டும்தான்!


அழுக்கடைந்த

‘ஹஜருல் அஸ்வத்’

சுவனக்கல்லும்

மகிமைப்பட்டது

உங்கள் கரங்கள் தொட்டுத்தான்!


மண்ணும் மறுதலிக்கும்

மனித மிருகங்களை

உங்கள் ஏகத்துவம் மட்டும்தானே

ஏற்றுக் கையளித்தது?


பெண்சிசுவை மண்மூடும்

பெருங்கொடுமைகள் எல்லாம்

உங்கள் காலடிகளில்தானே

காணாமல் போனது!


உங்கள்

கண்ணீர்த்துளிகளில் அல்லவா

உங்கள் உம்மத்துக்களாம்

எங்கள் உள்ளக்கறைகள்

கழுவப்பட்டன?


எங்கள்மேல்

அறையப்பட்ட ஆணிகளையெல்லாம்

உங்களின்

விரிந்த கர இறைஞ்சுதல்களல்லவா

பிடுங்கி எறிந்தன?


உங்கள்மீது மொழியும் அழகான

சலவாத்துக்களில்

எங்கள் ஆன்மா

பரிசுத்தப்படுத்தப்படுகிறது!

உங்கள் சுன்னத்துக்களில்

எங்கள் ஜன்னத்துக்கள்

அலங்கரிக்கப்படுகின்றன!


உங்கள்

பாதத் துகள்களின்கீNழு

எங்களுக்குப் பால் நதிகளும்

தேன் நதிகளும் பிறக்கின்றன!


உங்கள் பார்வைகளில்

எங்கள் பாவங்கள் மறைகின்றன!


உங்கள் ஒளிர்மைகள் - எங்கள்

இருட்டுக்களின் அழுக்குகளைக்

களைந்து விடுகின்றன!


உங்கள் கனிவுகள்

எங்கள் கவலைகளைக்

கழற்றி விடுகின்றன!


அகில முழுமைக்குமே

அருட்கொடையாக

அனுப்பப்பட்டவர்களல்லவா நீங்கள்?


மானுடம் முழுமைக்கும்

நீங்கள் மட்டும்தானே

முன்மாதிரியாக முன்மொழியப்பட்டீர்கள்?


உங்கள்

மேனியிலிருந்து வழிந்த

வியர்வை முத்துக்களில்

எங்கள் சுவனக் கூலிகள் அல்லவா

நிச்சயிக்கப்பட்டன?


நீங்கள்

எட்டிநடந்த

ஒவ்வொரு எட்டிலும்

எங்கள் பாதைகள் அல்லவா

செப்பனிடப்பட்டன?


உருக்குலைந்துபோன

படைப்பினங்களை

ஒழுங்குபடுத்த வந்தவர்களில்

உங்களைப்போல்

முழுமையானவர் யாருமே இல்லை!


இந்த

அத்தாட்சிப் பத்திரங்களை

அன்று இறைவன் சொன்னான்

இன்று

உலகம் சொல்கிறது!

இனிவரும்

நாளும் சொல்லும்

உங்கள் வழியேதான்

அனைத்து உலகமும் செல்லும்!


ப.அத்தாவுல்லா



அருஞ்சொற்பொருள்:

உம்மத்துக்கள்-சமுதாயம், சுன்னத்துக்கள்-வழிமுறைகள், ஜன்னத்துக்கள்-சுவர்க்கம், ஸலவாத்து-நபிவாழ்த்து, ஜம்ஜம்-வற்றாத புனித நீரூற்று(மக்காவிலுள்ளது), ஹஜருல் அஸ்வத்-கஅபாவில் உள்ள சுவனக்கல், இருமை-இம்மை-மறுமை

Wednesday, January 6, 2010

துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன்

துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌ன்

துபாய் : துபாயில் கொடிக்கால்பாளைய‌ம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷ‌னின் 15 ம் ஆண்டு வ‌ருடாந்திர‌ பொதுக்கூட்ட‌ம் ஜ‌ன‌வ‌ரி 8 வெள்ளிக்கிழ‌மை ( ஹிஜ்ரி 1431 முஹ‌ர்ர‌ம் 22 ) ஜும் ஆ தொழுகைக்குப் பின்ன‌ர் அல் மம்சார் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

கூட்ட‌த்திற்க்கு த‌லைவ‌ர் எம்.ஏ. முஹ‌ம்ம‌து அப்துல் ப‌த்தாஹ் த‌லைமையேற்க‌வும், துணைத்த‌லைவ‌ர் ஈ.கே.எம்.ஜே. சிராஜுதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்த‌வும், செய‌லாள‌ர் கே.சுல்தான் அப்துல் காத‌ர் ஆண்ட‌றிக்கை வாசிக்க‌வும், பொருளாள‌ர் ஏ. ஹுமாயுன் க‌பீர் நிதிநிலை அறிக்கை வாசிக்க‌வும், த‌ணிக்கையாள‌ர் அறிக்கையினை இ. குத்புதீனும் வ‌ழ‌ங்க‌ உள்ள‌ன‌ர்.

ச‌ங்க செயலாக்க‌ம் செய‌ல்ப‌டுத்த‌ல் திட்ட‌ம் மற்றும் க‌ருத்துப் ப‌ரிமாற்றமும் நடைபெற‌ உள்ள‌து. துணை செய‌லாள‌ர் ஆர். இன்சான் அலி ந‌ன்றியுரை நிக‌ழ்த்துவார்.

அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இருந்தும் வாக‌ன‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 7499 427 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இந்நிக‌ழ்வில் கொடிக்கால்பாளைய‌ம் ந‌க‌ரைச் சேர்ந்த‌ அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


தகவல் : MUSLIM NEWS AGENCY ( M.N.A. )