Saturday, November 10, 2007

கல்வி கற்பது கடமை!

முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.

இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.




சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007

http://tmpolitics.blogspot.com/2007/11/urgent-urgent.html
www.tamilmuslimmedia.com

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

http://tmpolitics.blogspot.com/2007/11/urgent-urgent.html
www.tamilmuslimmedia.com

Please Forward to All immediately to get benefit from it.


முஸ்லிம்கள் கல்வி கற்பது கடமை!
பணம் இல்லையே என்று படிக்காமல் இருப்பது மடமை!!
இதோ, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள்


B.Sc(Agri) B.V.Sc., B.Ed, A.Arch., B.L.,B.E.,B.Tech.,B.D.S.,M.B.B.S.,M.S.,M.D.,M.E.,M.S.W.,M.Tech.,M.C.A மற்றும் Professional/Technical இதர பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் 366 பேருக்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் கல்வி உதவித்தொகை வழங்குகின்றது. மாணவியருக்கு தனியே 30% ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கல்விக் கட்டணம் (டியுசன் பீஸ்) ரூ.20,000/- வரை. மேலும் விடுதியில் தங்கிப் படிப்போர்க்கு ஆண்டிற்கு ரூ.10,000/- மற்றவர்களுக்கு ரூ.5,000/ கிடைக்கும்.

IIM, IIT, NIT, IITDM, JIPMER ல் படிப்பவர்களுக்கு முழுக்கட்டணம் கிடைக்கும்.

இந்த உதவித் தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் :

1.+2 தேர்வில் 50% மார்க் பெற்றிருக்க வேண்டும்.

2. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இரக்க வேண்டும்.Affidavit is non judicial stamp paper without notary public signature அல்லது பணி செய்யும் நிறுவனங்களில் இருந்து ஆண்டு வருமானச் சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.

3. தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற அரசு அதிகாரியின் சான்றிதழ் (Residency Certifivcate) பெற வேண்டும்.

4.வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் நாட்டு ஒதுக்கீட்டிலேயே பெற வேண்டும்.

5.தற்சமயம் படிக்கும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி (Admission Card) மற்றுமு் கல்விக் கட்டணம் (Tution fee) சான்றிதழ் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.minorityaffairs.gov.in என்ற இணையத் தளத்தில் Scheme என்ற தலைப்பின்கீழ் Merit Cum Mens Scholorship Scheme ல் சென்று விண்ணப்ப படிவம் மற்றுமு் இதர விபரங்களை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

14-10-2007 Hindu நாளிதழ் பக்கம் 12 ல் மற்றும் 14-10-2007 தினத்தந்தி நாளிதழ் பக்கம் 13 லட இது சம்பந்தமான விளம்பரம் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-10-2007 இருந்து 30-11-2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி மூலம் உடனே அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.




சிறுபான்மையினர் நல ஆணையர் மற்றும்
மேலான்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையனர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
807, அண்ணாசாலை, சென்னை - 600002


மேலும் விபரங்களுக்கு :
ஜனாப். ரிஸ்வான் அஹமது (மேலாளர் TAMCO)
தொலைபேசி 044-28514846 அல்லது
044-28515450
என்ற தொலைபேசயில் தொடர்பு கெள்ளவும்.


சமுதாய ஆர்வளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், சமுதாய அமைப்புகள் ஆகிய அனைவரும் இச்செய்தியினை பள்ளிவாசல்கள், கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்து மேலும் அச்சடித்து விநியோகம் செய்து முஸ்லிம்களிடம் எடுத்து சொல்லி உடன் பயன் பெறச் செய்யவும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-11-2007

Tuesday, November 6, 2007

சாதனையாளர் சலாஹ¤த்தீன் காக்கா




சாதனையாளர் சலாஹ¤த்தீன் காக்கா

நர்கிஸ் பிப்ரவரி இதழ் அச்சுக்குள் நுழையும் தருவாயில் வெளிநாட்டுவாழ் இந்தியர் சாதனையாளர் விருதான "பிரவாசி பாரதீய சம்மான்" உலகப் புகழ்பெற்ற ஈடிஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் பன்னாட்டுத் தொழிற்குழுமத்தின் மேலாண்மைத்தலைவர் கீழக்கரை தந்த செல்வப்புதல்வர் அல்ஹாஜ் செய்யது சலாஹ¤த்தீன் காக்கா அவர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதை நர்கிஸ் பதில்கள் பகுதியில் பதிவு செய்து மகிழ்ந்தோம்.

35 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு கட்டுமானக் கம்பெனியாகத் தொடங்கப்பட்டு இன்று சுமார் மூன்றரை பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பன்னோக்கு -பன்னாட்டு -பன்முகத் தொழில் சாம்ராஜ்யமாக உயர்ந்து நிற்கிற - உலகம் முழுக்க 21 நாடுகளில் 45000 தொழிலாளர்களை உள்ளடக்கிய (35000 இந்தியர்கள்; பெரும்பாலோர் தமிழர்கள்) மிகப் பெரிய ஒரு தொழிற்குழுமத்தலைவர் என்ற பந்தா எதுவுமின்றி "இது என் தலைமையில் பணிபுரியும் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கும் கிடைத்த விருது; அதனை நான் அவர்கள் சார்பிலேயே பெற்றுக்கொள்கிறேன்" என்று அடக்கத்துடன் அறிவித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார் காக்கா அவர்கள்.

இந்த வார்த்தைகள் ஏதோ மரியாதை நிமித்தம் சொல்லப்பட்டவை அல்ல என்பதை அவரை அறிந்த அனைவரும் - குறிப்பாக , அவரது தலைமையின்கீழ் பணியாற்றும் அத்தனை சகாக்களும் ஈடிஏ அஸ்கான் தொழிற் குடும்பத்தின் அனைத்துமட்டத் தொழிலாளர்களும் அறிவார்கள்.

அதிகம் பேசாத ஆனால் ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்துவைக்கும் அதிபுத்திசாலி அவர்கள். அக்குழுமத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றும் தொழிலாளியும் ஒரு அசாதாரண மன நிறைவுடன் பணியாற்றுவதைப் பார்த்து நாம் பெரிதும் வியந்திருக்கிறோம். அந்த நிம்மதியின் உண்மையான அடிப்படை, கடின உழைப்பாளிகளான அவர்களுக்கு தகுந்த ஊதியத்துடன் வாழ்விட அடிப்படை வசதிகளையும் வணக்க வழிபாடுகளுக்கான வழிவகைகளையும் மிக நுட்பமான உத்தியுடன் செய்து கொடுத்திருக்கும் மனிதாபிமான உந்துதல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பலநாடுகளில் -குறிப்பாக மத்திய கிழக்கில் - கடைநிலை ஊழியர்களுக்கான வாழ்விடச் சூழ்நிலைகளின் பரிதாப நிலையை நேரில் பார்த்து -மனம்பதறிய -அவற்றை ஆய்வுப் பதிவுகளாக்கிய அனுபவமுள்ள நமக்கு ஈடிஏ அஸ்கான் குழும தொழிலாளர் வாழ்விடச் சூழ்நிலைகள் தந்த நிறைவுதான் - அதன் தொழிலாளர்களின் முகத்திலும் அகத்திலும் நம்மால் பார்க்கமுடிந்த ஆசுவாசம்தான் அக்குழுமத்தின் அமோக வெற்றிக்கு அடித்தளம் என்பதை இங்கே சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்!

எனவே, நம் வியப்பும் மகிழ்ச்சியும் நம்மை அத்தொழிற்குடும்பத்தின் நிர்வாகத்தலைவரான சலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் பால் அளப்பெரிய -அரிய மரியாதையை ஏற்படுத்தியது என்பதையும் கடமை உணர்வுடன் பதிவுசெய்தாக வேண்டிய காட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. ஓரிரு வார்த்தைகளில் சொல்வதானால், ஈடிஏ அஸ்கானின் தொழிற்சூழல் அனைத்துத் தொழில்முனைப்பாளர்களும் பார்த்துப் பயிலவேண்டிய ஒரு முன்னுதாரணத் தொழிற்சூழலாகும் (Examplary Business / Industrial environment).

சலாஹ¤த்தீன் காக்கா அவர்களின் தொழில்முனைப்பு ஊக்கம் அந்த இடத்திலே மட்டும் கால்கொண்டு நின்றுவிடவில்லை. அது துபையின் "ஈமான்" மூலம் பரந்த கல்விப் பணியில் - சமுதாயக் களப்பணியில் வலுவாகக் காலூன்றி வளர்ந்து வருகிறது. அவர்களது கல்விப் பணியின் முதிர்ச்சியாக BITS Pilani , Manipal Academy of Higher Education , Dubai இன்று சான்றாக நிற்கின்றன.


நோன்பு காலங்களில் துபையில் 4000 -க்கும் அதிமான மக்கள் ஓரிடத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பாடு செய்து அமீரகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய உன்னதம் அவர்களது இன்னொரு சாதனை!

வினாடி இடைவெளி இல்லாத பணிச்சுமைக்கு மத்தியிலும் பரபரப்பில்லாத உணர்வு வெளிப்பாட்டில் மென்மையான பேச்சு , ஊன்றிக் கவனிக்கும் உபாயம், வெளிப்படையான கருத்துரைப்பு, வேஷம் போடாத விருந்தோம்பல் பண்பாடு அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!

இந்த வேளையில் தன் உறவினர் சலாஹ¤த்தீன் அவர்களின் ஆற்றலை -தொழில் மேலாண்மைத் திறனை ஆரம்பத்திலேயே எடை போட்டு உரிய இடத்தில் அமர்த்திய தொழில் மேதை -கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. காக்கா அவர்களின் முன்னோக்குத் திறனையும் எண்ணி வியக்கிறோம்.

இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இவ்வரிய விருதினை சலாஹ¤த்தீன் காக்கா அவர்களுக்கு வழங்கியபோது தனிப்பட்ட முறையில் எத்தகைய மகிழ்ச்சிக்கு ஆளாகியிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்கிறோம்.

இந்திய உபகண்டத்தின் தென்கோடி முனையில் ஒரு சாமான்யக் குடும்பத்தில் பிறந்து - கடின உழைப்பில் படிப்படியாக உயர்ந்து அறிவியல் உலகத்தைத் தன்னைநோக்கித் திரும்பிப்பார்க்கவைத்தவர் அவர்.

தன்னைப்போலவே தன் மண்ணிலே பிறந்து வளர்ந்த இன்னொரு சகோதரன் தன் தொழில்மேலாண்மைத் தீட்சண்யத்தால் -திறத்தால் இன்று உலகம் உற்று நோக்கும் ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்திருப்பதையும் , அவருக்கு இந்திய முதல்மகனாக நின்று தன் கையால் விருது வழங்கி கௌரவிப்பதையும் எவ்வளவு உணர்வுப்பூர்வமாக அனுபவித்திருப்பார் என்பதை நாம் அசைபோட்டு, இதற்குக் காரணமான இறைவனுக்கு நன்றி சொல்கிறோம்!

நிர்வாக மேலாண்மைக் கல்வி இன்று பல பரிமாணங்களை எட்டியிருக்கிறது. ஆனால் அன்று அது ஓர் அரிய பொருள். இருந்தும் காக்கா அவர்கள் இறைவனின் பேரருளாலும், தமது நுண்ணறிவு - விடாமுயற்சி மற்றும் தைரியமிக்க அணுகுமுறைகளாலும் தமது தொழில் முயற்சியில் அசாதாரண உச்சத்தை எட்டியிருக்கிறார்கள். இவை அடுத்த தலைமுறைக்குப் பாடமாக வேண்டும் ; பாடமாக்கப் பட வேண்டும் . அதனால் அவர்கள் தங்களது தொழில்முனைப்பு -மேலாண்மை அனுபவங்களைத் தக்காரை வைத்து பதிவு செய்து நூலாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

அல்லாஹ் காக்கா அவர்களுக்கு நீடித்த ஆயுளையும் நெடிய சேவையையும் பயன்பட வாழ்தலின் பரிபூரணத்தையும் மேலும் மேலும் அளித்து கண்ணியப் படுத்துவானாக, ஆமீன்!

DR HIMANASYED

தலையங்கம் - மார்ச் - 2007
NARGIS
Muslim Woment Monthly

ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான்














மம்சார் பூங்கா




SAFA PARK IN DUBAI

Sunday, August 5, 2007

துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு

துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கும் துபாய் நகரில் ஈமான் அமைப்பு அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அருளப்பெற்ற அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித மிராஜ் இரவையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சி துபை தேரா பகுதியில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்தப்படுகிறது.

ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தின் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி அல்ஹாஜ் எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ ‘’புனித மிராஜ் இரவு’ குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்புரைக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு பள்ளியின் மேல் தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ ஹமீது யாசின் 050 475 3052/042661415 ( மாலை 6 மணிக்கு மேல் ) ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தகவல் :
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்
050 5196433