Wednesday, April 30, 2008

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைமனை

இணையதள முகவரி: www.educationsupport.nic.in

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது.

அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும், கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்யும் குழுவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
http://www.darulsafa.com

Regards
M.G. Fakrudeen
www.mypno.blogspot.com

துபாய் ஆரோக்கிய அறிவியல் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஆரோக்கிய அறிவியல் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி
புதன்கிழமை, ஏப்ரல் 30, 2008


துபாய்: ஆரோக்கிய அறிவியல் என்ற நிகழ்ச்சி ஈமான் அமைப்பு சார்பில் துபாயில் நடந்தது.

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் 'ஆரோக்கிய அறிவியல்' என்ற மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த 25ம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி முன்னிலை வகித்தார். செயலாளர் யஹ்யா முஹியித்தீன் வரவேற்றார்.

துபாய் பிரைம் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் காது,மூக்கு,தொண்டை நிபுணர் காயல் டாக்டர் பி.எம். செய்யது அஹ்மது மருத்துவ அறிவியலின் வளர்ச்சி குறித்து பேசினார். மருத்துவம் சார்ந்த சந்தேகங்களை விளக்கினார்.

'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து பேசினார். டாக்டர் மாஹின் செய்யது இஸ்மாயில் பல் மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு பதலளித்தார்.

ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், கல்விக்குழு செயலாளர் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



http://thatstamil.oneindia.in/news/2008/04/30/world-madical-councelling-program-held-in-dubai.html

http://www.dinamalarbiz.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=515&Country_name=Gulf&cat=new

Friday, April 25, 2008

துபாய் ஈமான் நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ஆரோக்கிய அறிவியல் நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு 'ஆரோக்கிய அறிவியல்' எனும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி 25.04.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் மௌலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி முன்னிலை வகித்தார். விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

துபாய் பிரைம் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் காது,மூக்கு,தொண்டை நிபுணர் காயல் டாக்டர் பி.எம். செய்யது அஹ்மது மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். மேலும் காதை பட்ஸ் வைத்து காது குடைவதால் ஏற்படும் விபரீதம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்.

'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ தனது உரையில் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் சமுதாய அமைப்பான ஈமான் அமைப்பின் சேவைகளைப் பாராட்டினார்.

டாக்டர் மாஹின் செய்யது இஸ்மாயில் பல் மருத்துவம் குறித்தும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல் மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்தார்.

ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், சுவாமிமலை இஸ்மாயில் ஹாஜியார், கல்விக்குழு செயலாளர் யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )











Thursday, April 24, 2008

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html


துபாயில் இன்று மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பின் சார்பில் இன்று (ஏப்ரல் 25) மாலை மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அஸ்கான் டி பிளாக்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT) உரையாற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் ஆகியோரும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712

யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888



படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0425-medical-consultation-meet-at-dubai.html

Wednesday, April 23, 2008

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்


நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்

இணைந்து நடத்தும்

"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"

நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரை

தலைப்பு

"இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்"

முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்
4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான
ஆதாரங்கள் தரப்பட வேண்டும்.


நாவல்

முதல் பரிசு: ரூபாய 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,
நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும்
சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8
பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான
பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/
ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது
மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்
உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த
ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு
அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்
தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை
வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;
அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்
மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்
அனுப்பிவைக்கப்படும்.

9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,
மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட
வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்
குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட
ஆக்கங்களையும் அனுப்பலாம்.


எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001


டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
(ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513

Monday, April 21, 2008

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

தமிழகத்தில் இந்தோ - ரஷிய மருத்துவமனை தொடங்க வேண்டும்

டாக்டர் மீர் முஸ்தபா உசேன் வலியுறுத்தல்

ரஷியாவில் மருத்துவம் படித்து விட்டு தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்தோ - ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று டாக்டர் மீர் முஸ்தபா உசேன் கூறினார்.

கருத்தரங்கு

ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனம் மற்றும் ரஷியாவில் உள்ள ஸ்டவராபோல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ரஷியாவில் மருத்துவம் படிக்க மாணவர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஏ.ஜே. அறக்கட்டளை சார்பில் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்வி படிப்பது குறித்து கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அபுபேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவன தலைவர் ஏ. அமீர்ஜஹான் தலைமை தாங்கினார். ரஷிய நாட்டின் ஸ்டவரோபோல் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் ஸ்டோயனா வி சமன்ஸ்கயா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

அங்கீகாரம்

உயர்கல்வி, வேலைவாய்ப்புக்காக மேற்கத்திய நாடுகளையே சார்ந்திருந்த இளைஞர்களின் பார்வை தற்போது ரஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்கத்திய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் ரஷியாவில் உள்ள 3 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற 10 பல்கலைக்கழகங்கள் தற்போது ரஷியாவில் உள்ளன.

வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், அந்த பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளதா ? என்பதையும், ஆங்கில வழிக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படுகிறதா ? என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு வருபவர்களுக்கு இங்கு சரியான மரியாதை தரப்படுவதில்லை.

முன் வர வேண்டும்

அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக இந்தோ - ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும். அங்கு படிப்பு முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு வேலை கொடுப்பதற்கும், பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனை உபயோகமாக இருக்கும். இதற்கு ரஷியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் முன் வரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் ரஷிய மருத்துவ கல்லூரிகளில் பயிலும் தமிழக மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
A J TRUST EDUCATIONAL CONSULTANCY
Crescent Court Building
No 963 Poonamallee High Road
Chennai 600 084
Tel / Fax : 044 2661 4485 / 3295 9991
Mobile : 93 828 62393 / 98 406 52729 / 93800 05652
ajtrustchennai@yahoo.com
najeerul2003@yahoo.co.in
www.medicaleducationindiarussia.org

Saturday, April 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thursday, April 17, 2008

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய

கடைசி தேதி : 30-05-2008
.

இஸ்லாம்!

இஸ்லாம்!
---------
இது வாழ்வின்
நெறி முறை!
இது மாற்றாருக்கு
எளிதில்
பிடித்துவிடுவதில்லை!
பிடித்து விட்டால்
எவரும் அதை
விட்டு விடுவதில்லை!

இது தான் கொள்கை!
இப்படித்தான்
வாழ்தல் வேண்டும் எனும்
இறையும் மறையும்
காட்டிய வழிமுறை!
கடைபிடிப்போர்
மனிதராய் வாழ்ந்து
மூமினாய்
மறைவர்!

அன்பு
அறம்
தானம்
நல்லொழுக்கம்
முறையான
நேரம் தவறா
வழிபாடு
இவையே
இஸ்லாத்தின்
பயிற்சிகள்!
பாடங்கள்!

கடவுள்!
இருப்பதையே
ஏற்றுக்கொள்ளாத
காலம் ஒன்றிருந்தது!
இன்றோ
இருக்கும் கடவுளரில்
யார்?
கடவுள் தேடலிலேயே
காலம் கடந்து
கொண்டிருக்கிறது.

இது
பகுத்தறிவு மார்க்கம்!
மூட நம்பிக்கைகளுக்கு
இங்கு
இடமில்லை!
முஸ்லிம்கள்
மூடராய் இருப்பதில்லை!
மூடர்கள்
முஸ்லீமாய்
இருப்பதில்லை!

மது
மாது
சூது
போதைகள்
வட்டி
வேண்டாச் சேர்க்கை
ஊழல்
இவற்றுக்கு இங்கு
அறவே
இடமில்லை!

கட்டுப்பாடு
இருக்கும் இடமே
ஒழுக்கம் இருக்கும்!
ஒழுக்கம் கொண்டோர்
வாழ்வு
இனிதே
சிறக்கும்!
இனிய வாழ்வுதன்னை
இஸ்லாமே கொடுக்கும்!
இம்மை மறுமை
இரண்டையும் பயக்கும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.
drimamgm@hotmail.com

Sunday, April 13, 2008

ஈமான் அமைப்பின் பணிகளுக்கு வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும்.. வரஹ்..

ஈமானின் சகோதர உள்ளங்கள் அனைவருக்கும் என்னுடைய ஸலாம் உரித்தாகுக..

தாங்களின், இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷனின் 30 ஆம் ஆண்டு விழா சிறப்பு
மலரினை நண்பர் சகோதரர். முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் மூலமாக எனக்கு
கிடைத்தது. அம்மலரில் உள்ள அனைத்து ஆக்கங்களுக்கும், கட்டுரைகளும்.
கவிதைகளும் மிகவும் நிறைவாக உள்ளது. அல்லாஹ்வின் திருப்பொருத்தை பெற
வேண்டி தாங்கள் அனைவரும் ஆற்றி வரும் சிறப்பு பணிகள் மேன் மேலும்
தொடர்ந்து வளர வேண்டி என்னுடைய நல் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன். கல்வி முன்னேற்றத்திற்காகவும் மற்றும் சமுதாய
முன்னேற்றத்திற்காகவும் தாங்களின் ஈமான் மிக சிறப்பாக அமீரகத்தில்
செம்மையாக செயல் பட்டு கொண்டு வருகிறது என்பதினை காணும் போது நெஞ்சம்
மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ்..

தாங்கள் செய்யும் பற்பல பணிகள் அமீரகத்திலும் மற்றும் தாயக நாட்டிலும்
மேலும் வளர்ந்து பெருக வேண்டியும் மேலும் என்னுடைய நல்வாழத்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்..
வளருங்கள்..
வாழுங்கள்..
வளங்களுடன்..


இவண்..
முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
Br. Muthupettai abu afrin
post box - 601
fujairah.uae
050 3903736
zakhariya raaf
dateSun, Apr 6, 2008 at 11:39 PM