Thursday, August 14, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1429 ஷஅபான் பிறை 15, ஆகஸ்ட் 15,2008 வெள்ளி மாலை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் மஃரிபு தொழுகைக்குப் பின் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்யப்படும். முதலாம் யாசின் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிவிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்படும்

இரண்டாம் அமர்வு

வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ , மௌலவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள்.

மேலும் வழக்கம்போல் பயானுக்குப் பின் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் கலந்து இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு : 16 ஆகஸ்ட் 2008 சனிக்கிழமை நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

ஈமான் விழாக்குழு

No comments: