Sunday, February 8, 2009

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி சான்றிதழ் பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, பிப். 7: வேளாண் பல்கலை. தொலைநிலைக் கல்வி மூலமாக வழங்கும் சான்றிதழ் பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், நவீன களை மேலாண்மை, மண்வள மேலாண்மை ஆகிய சான்றிதழ் பாடங்களை தொலைநிலைக் கல்வியில் வேளாண் பல்கலை. வழங்க உள்ளது.

பயிற்சிக் காலம் 6 மாதங்கள். ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இப் பாடங்களில் சேரலாம்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இயக்குநர், தொலைதூரக் கல்வி இயக்ககம், வேளாண் பல்கலைக்கழகம், கோவை-641 003 என்ற முகவரியில் பெறலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 0422-6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கான நேரடிச் சேர்க்கை மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது என்றார்.

No comments: